Sunday, May 1, 2016

'இயற்கை பானம்'

 பழத்தைக் கழிவி ( washing ), சாறு பிழிந்து ( extracting ) அல்லது சாறு எடுத்து, ஒன்றாகக் கலந்து ( blending ), பழத்தின் எண்ணெய்த் தன்மையை நீக்கி ( de-oilling ), விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க ஆக்சிஜனை வெளியேற்றி ( deaerating), பால் பதப்படுத்துவதுபோலப் பதப்படுத்தி ( paste urize), கசப்பு நீக்கி ( debittering ) அமிலத்தன்மையைக் குறைத்து அல்லது கூட்டி ( acide stabliization ), ஆடை அல்லது மேகம் போல் படர்வதைச் சீராக்கி ( cloud stabliization ),கொதிக்கவைத்து ( evaporating ) பிறகு குளிர்வித்து ( freezing ) திடப்படுத்துகிறார்கள்.  இப்படி ஒவ்வோரு செயலுக்கும் பல இயந்திரங்களில் இந்தப் பழங்களைப்பதப்படுத்தி எடுத்து, கடைசியாக பழச்சாரின் அடர்வை ( concentrate ) பெறுகின்றனர்.  இந்தப் பழ கான்சன்ட்ரேட்டைத்தான் நம் ஊரின் பழ குளிர்பான நிறுவனங்கள் வாங்கி, நீரும் சில நேரத்தில் அமிலச் சீராக்கிகளும் சேர்த்து, டெட்ராபேக்கில் அடைத்து கடையில் விற்கிறார்கள்.  பிரேசில், பெரு, ஐரோப்பா எனப் பல நாடுகளில் இருந்து வரும் கான்சன்ட்ரேட் சத்துக்கள் பெரும் குளிர்கிடங்கு வசதிகொண்ட கப்பல்களில் இங்கே இறக்குமதி செய்யப்பட்டு, இறுதியாக இந்தியத் தண்ணீர் தெளிக்கப்பட்டு, 'இது இயற்கை பானம்' என்ற அடைமொழியுடன் விற்பனைக்கு வருகிறது.
-- மருத்துவர் கு.சிவராமன்.  ( ஆறாம் திணை  தொடரில் ).
-- ஆனந்த விகடன் . 27-2-2013. 

No comments: