இராமபிரானின் தாயான கௌஸல்யை காலமான சமயம் இராமர் அதிகமான தான தற்மங்களைச் செய்தாராம் . பிறகு குருவான வசிஷ்டரை வணங்கி , " ஸ்வாமி ! நான் நிறையத் தான , தர்மங்களைச் செய்தேன் . கோடிப் பசுக்களை ' கோதானம் ' செய்து விட்டேன் . இதனால் என் பிரியமான தாயின் மனம் மகிழ்ச்சி அடைந்திருக்குமா ? " -- என்று கேட்டாராம் .
அதற்கு வசிஷ்டர் , " அப்பனே ! ஒரு சமயம் உன் தாய் உன்னை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும்போது நான் எதிரில் வந்தேன் என்று உட்கார்ந்திருந்தவள் இடக் கையைத் தரையில் ஊன்றிக் கொண்டு சிரமத்துடன் எழுந்து கொண்டாள் . அந்த ஒரு சிரமத்துக்கு ஈடாகாது உன் கோதானம் " --- என்றாராம் . இராமர் தலை குனிந்தாராம் .
--- ' தாயின் மகிமை ' பற்றி என். டி. ராஜகோபால் சர்மா அவர்கள் கூறியது .
Friday, July 31, 2009
Thursday, July 30, 2009
`அப்படியா...
தொலைபேசி ஒழுங்குமுறை { டிராய் } 2 முதல் 8 வரையிலான எண்களை லேண்ட் லைன்களுக்கும் , 0 -வை எஸ். டி . டி . க்கும் , சிறப்பு எண்களுக்கு 1 -ம் கொடுத்தது போக , மீதமுள்ள 9-ஐ செல்போன்களுக்கும் கொடுத்ததால் தான் , எல்லா செல்போன் எண்களும் 9-ல் ஆரம்பிக்கின்றன .
அமெரிக்க நாட்டு ஜனாதிபதி தங்கும் மாளிகை வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படுகிறது . இது 1800-ம் ஆண்டு கட்டப்பட்டது .இதில் 100 அறைகள் உள்ளன . மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த மாளிகை , ஜரிஷ் நாட்டு கட்டிட நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது .
வானத்தில் சில நேரம் அதிசயமான வர்ண்ஜாலங்கள் சூரியன் அஸ்தமிக்கும் நேரம் தெரியும் . இவற்றை ' அரோரா ' என்று குறிப்பிடுவர்கள் . சூரிய ஒளிக்கதிர் துருவப்பகுதியில் பட்டு அதன் பிரதிபலிப்பே வானத்தில் இந்த வர்ண ஜாலங்கள் உருவாகிறது
ஜோதிட விதிப்படி இந்திய நாட்டின் நட்சத்திரம் ' பூசம் ' ஆகும் .
சொந்தமாக தேசியகீதம் இல்லாத ஒரே நாடு சைப்ரஸ் ஆகும் . கிரீஸ் நாட்டு தேசியகீதத்தைத்தான் சைப்ரஸ் நாடும் தனது தேசியகீதமாக பயன்படுத்தி வருகிறது . ., .
வாழ்நாள் முழுவதும் தண்ணீரே குடிக்காத ஜீவராசி எது தெரியுமா ? பல்லி . அப்படியென்றால் மூத்திரம் எப்படிப் போகிறதென்று நீங்கள் கேட்கலாம் . அது மூதிரமல்ல , ' யூரிக் ஆசிட் ' தான் மலமாக வெளியேறுகிறது . -- பாக்யா . ஏப்ரல் 3 -- 9 . 2009 .
அமெரிக்க நாட்டு ஜனாதிபதி தங்கும் மாளிகை வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படுகிறது . இது 1800-ம் ஆண்டு கட்டப்பட்டது .இதில் 100 அறைகள் உள்ளன . மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த மாளிகை , ஜரிஷ் நாட்டு கட்டிட நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது .
வானத்தில் சில நேரம் அதிசயமான வர்ண்ஜாலங்கள் சூரியன் அஸ்தமிக்கும் நேரம் தெரியும் . இவற்றை ' அரோரா ' என்று குறிப்பிடுவர்கள் . சூரிய ஒளிக்கதிர் துருவப்பகுதியில் பட்டு அதன் பிரதிபலிப்பே வானத்தில் இந்த வர்ண ஜாலங்கள் உருவாகிறது
ஜோதிட விதிப்படி இந்திய நாட்டின் நட்சத்திரம் ' பூசம் ' ஆகும் .
சொந்தமாக தேசியகீதம் இல்லாத ஒரே நாடு சைப்ரஸ் ஆகும் . கிரீஸ் நாட்டு தேசியகீதத்தைத்தான் சைப்ரஸ் நாடும் தனது தேசியகீதமாக பயன்படுத்தி வருகிறது . ., .
வாழ்நாள் முழுவதும் தண்ணீரே குடிக்காத ஜீவராசி எது தெரியுமா ? பல்லி . அப்படியென்றால் மூத்திரம் எப்படிப் போகிறதென்று நீங்கள் கேட்கலாம் . அது மூதிரமல்ல , ' யூரிக் ஆசிட் ' தான் மலமாக வெளியேறுகிறது . -- பாக்யா . ஏப்ரல் 3 -- 9 . 2009 .
Wednesday, July 29, 2009
' கோயம்பேடு "
தமிழ்.நாட்டின் தலைநகரம் சென்னையில் அமைந்துள்ள பஸ் நிலையம் , காய்கறி மார்க்கெட் பகுதியான் ' கோயம்பேடு ' முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் .இன்று ' கோயம்பேடு ' ஒரு மாபெரும் நகரத்தின் குறியீடாக , பல்வேறு அடுக்கு மாடி குடியிருப்புகள் , சந்தைகள் , கடைகள் , போக்குவரத்து நிலையங்கள் என்று உருமாறி இருந்தாலும் , இங்கே மகத்தான வரலாற்று மற்றும் புராணச் சிறப்புகள் புதைந்து கிடப்பதன் மவுன சாட்சியாக பல யுகங்களாய் நிமிர்ந்து நிற்கிறது குறுங்காலீஸ்வரர் கோயில் இந்தக் கோயிலில் அமைந்திருக்கும் அற்புதமான 14 தமிழ் கல்வெட்டுக்கள் அதன் சரித்திரத்தை நமக்கு அழகாக உணர்த்துகின்றன . கல்வெட்டுக்கள் மட்டுமல்ல , அருணகிரிநாதரின் திருப்புகழ் வழியாகவும் ,வால்மீகி முனிவரின் ராமாயணம் வழியாகவும் இக்கோயிலின் புராண வரலாறு நமக்குத் தெரிய வருகிறது .அக்காலத்தில் கோயம்பேடு , கோசை நகர் ,குசலவரி , குசலவபுரம் , பிராயச்சித்தபுரம் , கோயட்டிபுரம் போன்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டது .
ஒரு காலத்தில் அடர்ந்த கானகமும் , கொடிய விலங்குகளும் திரிந்த இந்தப் பகுதியைச் சீர் செய்து ஆசிரமம் அமைத்தார் மாமுனி வால்மீகி என்று சொல்கிறது புராண வரலாறு . கோயம்பேடு கானகத்தில் தனித்து விடப்பட்ட சீதாப்பிராட்டியாரை மீட்டு , பாதுகாப்பு அளித்த வால்மீகி முனிவர் , அங்கே சீதா பிராட்டியார் பெற்றெடுத்த லவ , குச சகோதரர்களுக்கு கல்வி அறிவையும் , வேறு பல வித்தைகளையும் கற்றுக்கொடுத்தார் .
அப்போது நிகழ்ந்த போரில் ராமபிரானுக்கே அவருடைய மகன்களை வால்மீகி அறிமுகம் செய்து வைத்தார் என்கிறது ராமாயண புராணம் . அப்படிப்பட்ட புராதன சிறப்புகள் நிகழ்ந்த பகுதிதான் இன்றைய கோயம்பேடு . இந்த கோயிலுக்கு குலோத்துங்க சோழன் , விஜயநகரப் பேரரசர் வீரபுக்கராயர் மற்றும் பல்லவர்கள் திருப்பணி செய்ததும் வரலாற்றுச் செய்திகள்தான் .
-- ஆர். சுரேஷ் , திருச்சி . தினமலர் . சிறுவர்மலர் . மார்ச் 27 . 2009 .
ஒரு காலத்தில் அடர்ந்த கானகமும் , கொடிய விலங்குகளும் திரிந்த இந்தப் பகுதியைச் சீர் செய்து ஆசிரமம் அமைத்தார் மாமுனி வால்மீகி என்று சொல்கிறது புராண வரலாறு . கோயம்பேடு கானகத்தில் தனித்து விடப்பட்ட சீதாப்பிராட்டியாரை மீட்டு , பாதுகாப்பு அளித்த வால்மீகி முனிவர் , அங்கே சீதா பிராட்டியார் பெற்றெடுத்த லவ , குச சகோதரர்களுக்கு கல்வி அறிவையும் , வேறு பல வித்தைகளையும் கற்றுக்கொடுத்தார் .
அப்போது நிகழ்ந்த போரில் ராமபிரானுக்கே அவருடைய மகன்களை வால்மீகி அறிமுகம் செய்து வைத்தார் என்கிறது ராமாயண புராணம் . அப்படிப்பட்ட புராதன சிறப்புகள் நிகழ்ந்த பகுதிதான் இன்றைய கோயம்பேடு . இந்த கோயிலுக்கு குலோத்துங்க சோழன் , விஜயநகரப் பேரரசர் வீரபுக்கராயர் மற்றும் பல்லவர்கள் திருப்பணி செய்ததும் வரலாற்றுச் செய்திகள்தான் .
-- ஆர். சுரேஷ் , திருச்சி . தினமலர் . சிறுவர்மலர் . மார்ச் 27 . 2009 .
ஐ.எஸ்.ஐ
ஐ.எஸ்.ஐ .என்றால்...
.ஒரு பொருளுக்கு ஐ.எஸ்.ஐ . , முத்திரை வழங்கும் முன் , தயாரிப்பாளர்கள் ஏராளமான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் . முதலில் , நிறுவனம் வெளியிடும் தர நியமங்கள்படி பொருள் தயாரிக்க முடியுமா என்று கண்டறிதல் அவசியம் .
பிறகு , இத்தர நியமத்தின் படி தங்கள் பொருள்களை தயாரித்து , சோதனைச் சாலையில் பரிசோதித்து , பின் ' இந்திய தர நிர்ணய அமைவன'த்தை அணுகினால் , அதன் தொழில் நுட்ப அதிகாரிகள் , அந்த தொழிற்சாலைக்கு விஜயம் செய்து தயாரிப்பாளர்கள் தரமான பொருள்களை தயாரிக்க முடியும் என்று கண்டறிந்த பின்பே ஐ.எஸ்.ஐ .முத்திரையை குறிப்பிட்ட பொருள்களில் உபயோகிக்க அனுமதி வழங்குவார்கள் .
இந்த உரிமம் கூட ஒரு வருட காலத்திற்கு மட்டுமே . இந்த ஒரு வருட காலத்திலும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தொழில் நுட்பாளர்கள் முன்னறிவிப்புடனோ , முன்னறிவிப்பு கொடுக்காமலோ , தொழிற்சாலைக்கு திடீர் விஜயம் செய்து , பொருள்கள் , அவர்கள் சொன்ன வழிமுறைகள் படி தயாரிக்கப்படுகின்றனவா என்று கண்டறிவர் .
அதையும் தவிர தொழிற்சாலைகளிலிருந்து விற்பனைக்கு அனுப்பப்படும் பொருள்கள் , யார் யாருக்கு விற்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து அந்த கடைகளுக்கோ , கோடவுன்களுக்கோ சென்று மாதிரி பொருள்களை எடுத்து வந்து மறுபடி அவர்களது பரிசோதனைக் கூடத்தில் பரிசோதிப்பார்கள் .
எல்லாவற்றிற்கும் மேலாக நுகர்வோர்கள் , கடைகளில் ஐ.எஸ்.ஐ. , முத்திரையுடன் வாங்கிய பொருள்களின் தரத்தில் குறைபாடு இருப்பதாக அறிந்தால் , அவர்கள் அருகில் உள்ள ' இந்திய தர நிர்ணய அமைவன' த்துடன் தொடர்பு கொண்டால் , அவர்களது ' புகார் நீக்கும் அதிகாரி ' உடனே குறைகளை களைய ஏற்பாடு செய்வார் .
ஐ.எஸ்.ஐ ., முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் மீது ரூ . 50 ஆயிரம் வரை அபராதமும் , ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையும் வழங்க பாராளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது.
--- டி.ஆர். ராஜகோபால். இயக்குனர் , ' இந்திய தர நிர்ணய அமைவனம் ' ஜனவரி . 09 , 1994 தினமலர் இதழில்
.ஒரு பொருளுக்கு ஐ.எஸ்.ஐ . , முத்திரை வழங்கும் முன் , தயாரிப்பாளர்கள் ஏராளமான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் . முதலில் , நிறுவனம் வெளியிடும் தர நியமங்கள்படி பொருள் தயாரிக்க முடியுமா என்று கண்டறிதல் அவசியம் .
பிறகு , இத்தர நியமத்தின் படி தங்கள் பொருள்களை தயாரித்து , சோதனைச் சாலையில் பரிசோதித்து , பின் ' இந்திய தர நிர்ணய அமைவன'த்தை அணுகினால் , அதன் தொழில் நுட்ப அதிகாரிகள் , அந்த தொழிற்சாலைக்கு விஜயம் செய்து தயாரிப்பாளர்கள் தரமான பொருள்களை தயாரிக்க முடியும் என்று கண்டறிந்த பின்பே ஐ.எஸ்.ஐ .முத்திரையை குறிப்பிட்ட பொருள்களில் உபயோகிக்க அனுமதி வழங்குவார்கள் .
இந்த உரிமம் கூட ஒரு வருட காலத்திற்கு மட்டுமே . இந்த ஒரு வருட காலத்திலும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தொழில் நுட்பாளர்கள் முன்னறிவிப்புடனோ , முன்னறிவிப்பு கொடுக்காமலோ , தொழிற்சாலைக்கு திடீர் விஜயம் செய்து , பொருள்கள் , அவர்கள் சொன்ன வழிமுறைகள் படி தயாரிக்கப்படுகின்றனவா என்று கண்டறிவர் .
அதையும் தவிர தொழிற்சாலைகளிலிருந்து விற்பனைக்கு அனுப்பப்படும் பொருள்கள் , யார் யாருக்கு விற்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து அந்த கடைகளுக்கோ , கோடவுன்களுக்கோ சென்று மாதிரி பொருள்களை எடுத்து வந்து மறுபடி அவர்களது பரிசோதனைக் கூடத்தில் பரிசோதிப்பார்கள் .
எல்லாவற்றிற்கும் மேலாக நுகர்வோர்கள் , கடைகளில் ஐ.எஸ்.ஐ. , முத்திரையுடன் வாங்கிய பொருள்களின் தரத்தில் குறைபாடு இருப்பதாக அறிந்தால் , அவர்கள் அருகில் உள்ள ' இந்திய தர நிர்ணய அமைவன' த்துடன் தொடர்பு கொண்டால் , அவர்களது ' புகார் நீக்கும் அதிகாரி ' உடனே குறைகளை களைய ஏற்பாடு செய்வார் .
ஐ.எஸ்.ஐ ., முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் மீது ரூ . 50 ஆயிரம் வரை அபராதமும் , ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையும் வழங்க பாராளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது.
--- டி.ஆர். ராஜகோபால். இயக்குனர் , ' இந்திய தர நிர்ணய அமைவனம் ' ஜனவரி . 09 , 1994 தினமலர் இதழில்
Tuesday, July 28, 2009
பன்னிரு ஆழ்வார்கள் .
பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்த திவ்யதேசங்கள் :
1 . பொய்கையாழ்வார்--------------------- காஞ்சி.
2 . பூதத்தாழ்வார் ----------------------------- திருக்கடன் மலை .
3 . பேயாழ்வார் ---------------- ----------------மயிலை .
4 . திருமழிசையாழ்வார்------------------திருமழிசை .
5 . நம்மாழ்வார் --------------- ----------------திருக்குருகூர் .
6 . மதுரகவியாழ்வார் ----- ----------------திருக்கோளூர்.
7 . குலசேகராழ்வார் --------------------- ---திருவஞ்சிக்களம் .
8 . பெரியாழ்வார் ------------------------------ஸ்ரீவில்லிபுத்தூர் .
9 . ஸ்ரீஆண்டாள் -------------- -----------------ஸ்ரீவில்லிபுத்தூர் .
10.தொண்டரடிப் பொடியாழ்வார் -- -திருமண்டங்குடி .
11. திருப்பாணாழ்வார் ------------------- --உறையூர் .
12. திருமங்கையாழ்வார் --------------- ---திருவாலி திருநகரி .
--- ' இதுவே வைணவம் ' நூலிலிருந்து
1 . பொய்கையாழ்வார்--------------------- காஞ்சி.
2 . பூதத்தாழ்வார் ----------------------------- திருக்கடன் மலை .
3 . பேயாழ்வார் ---------------- ----------------மயிலை .
4 . திருமழிசையாழ்வார்------------------திருமழிசை .
5 . நம்மாழ்வார் --------------- ----------------திருக்குருகூர் .
6 . மதுரகவியாழ்வார் ----- ----------------திருக்கோளூர்.
7 . குலசேகராழ்வார் --------------------- ---திருவஞ்சிக்களம் .
8 . பெரியாழ்வார் ------------------------------ஸ்ரீவில்லிபுத்தூர் .
9 . ஸ்ரீஆண்டாள் -------------- -----------------ஸ்ரீவில்லிபுத்தூர் .
10.தொண்டரடிப் பொடியாழ்வார் -- -திருமண்டங்குடி .
11. திருப்பாணாழ்வார் ------------------- --உறையூர் .
12. திருமங்கையாழ்வார் --------------- ---திருவாலி திருநகரி .
--- ' இதுவே வைணவம் ' நூலிலிருந்து
Monday, July 27, 2009
ஜபத்தின் பலன் !
* வீட்டில் சுத்தமான இடத்தில் அமர்ந்து இறைவன் நாமாவை ஜபம் செய்தால் பலன் ஒன்றுக்கு ஒன்று .
* நதிக்கரையில் அல்லது நீரோடைக் கரையில் பலன் ஒன்றுக்கு இரண்டு
* பசு கட்டிய இடத்தில் ஒன்றுக்கு நூறு மடங்கு பலன் .
* யாகம் செய்த இடத்தில் ஒன்றுக்கு ஆயிரம் மடங்கு பலன் .
* சுத்தமான கோயில்களில் ஒன்றுக்குப் பத்தாயிரம் மடங்கு பலன் .
* புனிதத் தலங்களில் ஒன்றுக்கு லட்சம் மடங்கு பலன் .
* மகான்கள் சித்தி பெற்ற இடத்தில் ஒன்றுக்கு கோடி மடங்கு பலன் .
--- ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் , நூலிலிருந்து .
* நதிக்கரையில் அல்லது நீரோடைக் கரையில் பலன் ஒன்றுக்கு இரண்டு
* பசு கட்டிய இடத்தில் ஒன்றுக்கு நூறு மடங்கு பலன் .
* யாகம் செய்த இடத்தில் ஒன்றுக்கு ஆயிரம் மடங்கு பலன் .
* சுத்தமான கோயில்களில் ஒன்றுக்குப் பத்தாயிரம் மடங்கு பலன் .
* புனிதத் தலங்களில் ஒன்றுக்கு லட்சம் மடங்கு பலன் .
* மகான்கள் சித்தி பெற்ற இடத்தில் ஒன்றுக்கு கோடி மடங்கு பலன் .
--- ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் , நூலிலிருந்து .
Sunday, July 26, 2009
பிரணவ மந்திரம் .
' ஓம் ' என்ற மந்திரத்தில் ' அ ' ' உ ' ' ம் ' என்ற மூன்று எழுத்துக்களின் உச்சரிப்பு சேர்ந்திருக்கிறது . இதில் ' அ ' என்ற எழுத்து நம்முடைய வயிற்றுப் பகுதியிலிருந்து சக்தியுடன் எழுந்து வருகிறது . ' உ ' என்பது நம்முடைய கண்டத்தில்லிருந்து புறப்படுகிறது . நாம் முடிக்கும் ' ம் ' என்ற எழுத்து இந்த உச்சரிப்பை , உதடுகளை மூடி முடித்து வைக்கிறது . இந்த மூன்றும் மொழியை அமைக்கும் ஒலிகளை பிரதிபலிக்கும் செயல்களாக அமைகின்றன . ஆரம்பம் , இடை , முடிவு என்ற நிலைகளையும் அவை காட்டுகின்றன . நமது ரிஷிகள் இந்த மூன்றையும் இணைத்தே பிரணவ மந்திரமாக அமைத்திருக்கிறார்கள் . ஒவ்வொரு ஜீவனும் விழிப்பு , கனவு , உறக்கம் என்ற மூன்று நிலைகளையும் இணைத்து , உடலின் மூன்று பகுதிகளையும் சேர்க்கும் ' ஓம் ' என்ற மந்திரம் காட்டுகிறது . நாம் உட்கார்ந்து 'ஓம் ' என்று சொல்லும்போது , இந்தத் தத்துவத்தை முழுமையாக உணர வேண்டும் .
--- சுவாமி பூர்ணானந்த தீர்த்தர்
--- சுவாமி பூர்ணானந்த தீர்த்தர்
Subscribe to:
Posts (Atom)