Monday, June 1, 2009

" அசோகனும் -- புத்தமதமும் "

மாமன்னன் அசோகன் போர்க்களத்தில் இருக்கிறான் . போர் முடியாததால் நெடுநாள் தங்க நேரிடுகிறது . தன் மகன் குணாளனுக்கு 5 வயது நிறைவதால் உரிய நாளில் பள்ளியில் சேர்க்கத் தலைநகருக்குத் தான் செல்லமுடியாத நிலைக்கு வருந்துகிறான் . உரிய நாளில் பள்ளியில் மகனைச் சேர்த்து விடுமாறு ஓலையெழுதி விடுகிறான் . அரண்மனை அதிகாரிகள் , படைத்தலைவர் , முதலமைச்சர் ஆகியோர் முன்னிலையில் அசோகனின் ஓலையைத் திருமந்திர ஓலை நாயகம் ( ஓலை படிக்கும் அதிகாரி ) உரத்துப் படிக்கிறான் : ' குமாரம் அத்தியாபசேத் ' -- குமாரனை அத்தியயனம் ( கல்விகற்க செய்க ) என்பதே அவ்வோலை வாசகம் . அதனைத் தவறுதலாக ' குமாரம் அந்தியாபசேத் ' -- குமாரனை அந்தகனாக ( குருடனாக ) ச் செய்க என்று ஓலைநாயகம் படித்து விட்டான் . எல்லோரும் உண்மையென்றே நம்பி விட்டனர் .அரசி அழுது புலம்பினாள் . அரண்மனையிலுள்ளோர் புழுவாகத் துடித்தனர் . அரசன் ஆணை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று அரசவைப் பெருமக்களும் ஒப்புக்கொண்டனர் . வேறு வழியின்றி ஐந்து வயது சிறுவனான குணாளனின் கண்கள் குருடாக்கப்பட்டன . போர்களத்திலிருந்து திரும்பிய அசோகன் தன் மகனுக்கு நேர்ந்த நிலை கண்டு மயங்கி வீழ்ந்தான் . வாழ்நாளெல்லாம் துயரம் கவ்விய உள்ளத்தை வெளியுலகத்திற்குக் காட்டாமல் மறைத்து வாழ முயன்றான் . அம்முயற்சியில் தோற்றுப் போய் மன அமைதி தேடி புத்த மதம் சார்ந்தான் .
--- பிராகிருத மூலக்கதை . குமுதம் , 13 -01 - 1983 .

No comments: