Tuesday, June 2, 2009

பவிஷ்யோத்திர புராணம் !

பவிஷ்யோத்திர புராணத்தில் மனித உடலை விட்டு உயிர் பிரியும் தருவாயின் 4 நிலைகள் விளக்கப்பட்டுள்ளன . அவை : ஆர்த்தம் , ரவுத்ரம் , தன்யா மற்றும் சுக்லம் என்பவையாகும் .
உலக வாழ்வின் பொருள் மயமான சுகங்களில் அளவுகடந்த ஈடுபாடு கொண்டு வாழ்ந்து , பற்றெனும் பாசக்கிணற்றில் உழன்று , வயதான காலத்தும் ஆசை அற்றுப் போகாத காரணத்தால் உலகை விட்டுப் பிரிய மனமின்றி வருந்தி காலதேவனால் கட்டாயமாக அழைத்துக் கொள்ளப்படும் உயிர்கள் முன்னிலும் துயரம் மிகுந்த பிறவியை மீண்டும் அடைவர் . இதுவே ஆர்த்தம் எனும் நிலையாகும் .
சிலர் போனால் போகட்டும் என்று எண்ணி உடல் அழிவைப் பொருட்படுத்தாது மரணத்தை எதிர்கொள்வர் . அவர்களுக்கு உயர்ந்த மனிதப்பிறவியே அடுத்த ஜென்மாவிலும் வாய்க்கின்றது . இதனை ரவுத்ரம் எனக்கூறுவர் .
தன்யா என்பதோ யோகியர் அடையும் நிலை . தெளிவு , அடக்கம் ,மவுனம் மற்றும் ஞானநிலை எய்தியவராக யோகியர் உடலைத் துறக்கின்றனர் . அவர்களே தேவனிலையை எய்துகின்றனர் .
சுக்லம் என்பது பூரணமாக பிரம்மத்துடன் கலந்துவிடும் பிறவாமை எனும் நிலையாகும் .
--- ஸ்ரீ ஜெகநாத சுவாமி . தினமலர் , பக்திமலர் , மார்ச் 5 . 2009 .

No comments: