Wednesday, June 17, 2009

மாயாஜாலம் .

பறவைகள் கூட்டமாய் பறக்கும்போது ஒய் ( ' Y ' ) என்ற ஆங்கில எழுத்து வடிவில் பறந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு .
முதல் காரணம் : விஞ்ஞானபூர்வமானது . பறவைகள் நேர்வரிசையில் பறந்து சென்றால் அதிகமான காற்று அழுத்தத்தை சந்திக்கவேண்டிவரும் . காற்றின் அழுத்தம் அதிகமாகும்போது , பறவைகளால் வேகமாய்ப் பறக்க முடியாது . சீக்கிரமே களைப்படைந்துவிடும் . ' Y ' வரிசையில் பறக்கும்போது காற்றின் அழுத்தம் இரண்டு பக்கமும் சமமாய்ப் பிரிவதால் , நடுவில் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும் . அழுத்தம் குறைவதால் பறவைகள் சிரமமில்லாமல் பறக்கமுடிகிறது .
இரண்டாவது காரணம் : பொதுவாக பறவைகளின் கூட்டத்துக்கு ஒரு தலைவன் உண்டு . அந்தத் தலைவன் முதலில் பறந்துபோக , அந்தத் தலைவனைப் பார்த்துக்கொண்டே பறப்பதற்க்காக பறவைகள் ' Y ' வரிசையில் இரண்டு பக்கமும் பிரிந்து பறக்கின்றன .
---ராஜேஷ்குமார் , கேள்வியும்... பதிலும் : ராணி 23 - 11 - 2008 .

No comments: