Friday, June 12, 2009

தாஜ்மகால் .

முகலாய மன்னரான ஷாஜகான் தன்னுடைய 20-வது வயதில் அர்ஜுமான் பானு பேகம் என்பவரை மணந்தார் . இவர் தான் பின்னாளில் மும்தாஜ் என்று அழைக்கப்பட்டார் . இவருக்கும் ஷாஜகானுக்கும் 1613 லிருந்து 1631 வரை 11 குழந்தைகள் பிறந்தன .
அவர்களில் நான்கு குழந்தைகள் தான் உயிரோடு பிழைத்தன . அதில் ஒருவர் ஔரங்கசீப் . கடைசி பெண் குழந்தையான கவுகனாராவைப் பெற்றெடுத்த போது தான் பிரசவ பிரச்னைகளில் மும்தாஜ் இறந்து போனார் .
தன் அன்புக்குரிய மனைவியின் மரண்த்தை ஷாஜகானால் தாங்க முடியவில்லை . முதலில் பர்கான்பூர் என்ற ஊரில் புதைக்கப்பட்ட மும்தாஜின் உடல் , பிறகு தோண்டி எடுக்கப்பட்டு , யமுனை ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டது . அந்த இடத்தில் தான் , மும்தாஜுக்கு பளிங்கினாலான மாளிகையைக் கட்டினார் ஷாஜகான் . தாஜ்மகால் என்று பெயரிடப்பட்ட அந்த கனவு மாளிகையை கட்டி முடிக்கவே 22 ஆண்டுகள் ஆயின . இதன் நீளம் 1900 அடி , அகலம் 1000 அடி . தாஜ்மகாலைக் கட்டிய தலைமைச் சிற்பியின் பெயர் உசுதாத் இசா என்ற பாரசீகர் .இரவு நேரத்தில் நிலவொளியில் தாஜ்மகாலைக் காண்பது மெய்சிலிர்க்க வைக்கும் .
--- தினமலர் , சிறுவர்மலர் . மார்ச் 6 . 2009 .

No comments: