Sunday, June 21, 2009

அப்படியா ?

* ஓர் இந்திய விவசாயி , துன்பம் தாளாமல் தனது குறியை அறுத்து ரத்தத்தை சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்தார் .
* கைரேகை பற்றிய ஆய்வுக்கான பெயர் ' டாக்டியோ கிராபி ' .
* ஜான் எஃப் . கென்னடி அமெரிக்க ஜனாதிபதியாக மிகச்சரியாக 1000 நாட்கள் பதவியில் இருந்தார் .
* அமெரிக்காவுக்கு சுருக்கமாக ' யு.எஸ்.ஏ. ' என்ற வார்த்தையைச் சூட்டியவர் அந்நாட்டு எழுத்தாளரான தாமஸ் பெய்ன் ஆவார்.
* நேவிஸ் என்ற லத்தீன் சொல்லிலிருந்தே கப்பல் படையைக் குறிக்கும் ' நேவி ' என்ற சொல் வந்தது .
* இந்திய வரலாற்றில் முதன் முறையாக கோர்ட்டில் ஆஜரான ஜனாதிபதி வி.வி. கிரிதான் .
* பெண் எறும்புகள் எப்பொழுதும் வரிசையாய் போகும் . ஆண் எறும்புகளோ தனித்தனியாகச் செல்லும் .
* ஒரு மனிதன் சந்தோஷமாக அழும்போது ( அவங்க ஆனந்தக்கண்ணீர் ) கண்ணீரின் முதல் துளி வலது விழியிலிருந்து உதிரும் . வலியோ சோகத்திலோ அழும்போது இடது விழியிலிருந்து கண்ணீரின் முதல் துளி விழும் .
* முதன் முதலில் அலுமினிய உலோகத்தைப் பிரான்ஸ் நாட்டில் பாக்ஸ் என்ற இடத்தில் கண்டறிந்தனர் . எனவேதான் அதன் தாதுவிற்குப் பாக்ஸைட் என்று பெயர் வந்தது
* தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பளவு 1,30,058 சதுர கிலோ மீட்டர்கள் .
* உலகிலேயே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டைக் கடைபிடித்து வாழும் உயிரினம் புறா மட்டும்தான் .
* மொகலாய மன்னர்களில் அசைவ உணவை சாப்பிடாமல் சைவ உணவை இறுதிவரை சாப்பிட்டவர் அக்பர் மட்டும்தான்
* நவக்கிரகங்களில் சூரியனை ' பித்ருகாரகன் ' என்றும் , சந்திரனை ' மாத்ருகாரகன் ' என்றும் ஜோதிட நூல்கள் இயம்பும் .
* மகான்கள் துறவறம் ஏற்றுக்கொள்வது பெரும்பாலும் பவுர்ணமி நாட்களில்தான் ...

No comments: