Thursday, June 4, 2009

எத்தனை பேர் ?

பட்டணம் செல்ல ஒரு ராஜா புறப்படுகிறார் . அவருடன் 9 மனைவிகள் புறப்படுகிறார்கள் . ஒவ்வொரு மனைவியின் பின்னால் 9 குழந்தைகள் போகின்றன . ஒவ்வொரு குழந்தையின் பின்னால் 9 நாய்கள் செல்கின்றன . ஒவ்வொரு நாயின் பின்னால் 9 குட்டிகள் செல்கின்றன .
அப்படியானால் , ராஜாவுடன் போனவர்கள் மொத்தம் எத்தனை பேர் ? ( விடை : 7380 ) . 17 - 12 - 1983 .
நாய் வால் !
நாயின் வாலை நிமிர்த்த ஒருவன் விரும்பினான் . வால் அளவுக்கு ஒரு இரும்புக் குழாய் செய்து , அதற்குள் நாயின் வாலை நுழைத்து , ஒரு தூணில் பிணைத்தான் .
ஒரு ஆண்டுகாலம் தூணோடு சேர்த்து இணைக்கப்பட்டிருந்த அந்த வாலுக்கு விடுதலை அளிக்க பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்தான் . ஊருக்குப் பெரிய மனிதர் ஒருவர் விழாவிற்குத் தலைமை ஏற்றார் . அவனுடைய விசித்திர விழாவைக் காண பெருங்கூட்ட்ம் கூடியிருந்தது . இரும்புக் குழாயை உருவிப் பார்த்தபோது --
நாய் வால் வளைந்துதான் இருந்தது ! அதோடு இரும்புக்குழாயும் வளைந்து போயிருந்தது !
--- புலவர் கீரன் . கந்தபுராணச் சொற்பொழிவு . 24 - 12 - 1983 .

No comments: