Tuesday, June 9, 2009

கின்னஸ் சாதனை !

2 நிமிடத்தில் 51 கார மிளகாய் : இந்திய பெண் கின்னஸ் சாதனை .
2 நிமிடங்களில் 51 காரமான மிளகாயைத் தின்று இந்தியாவைச் சேர்ந்த பெண் கின்னஸ் சாதனை படைத்தார் .
அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவர் அனந்திதா தத்தா தாமுலி ( 28 ) .
உலகத்திலேயே காரம் அதிகம் உள்ள மிளகாய் என்று 2007 -ல் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மிளகாயைத் தின்று உலக சாதனை படைக்க நினைத்தார் அனந்திதா .
சாதாரண மிளகாயின் காரத்தை விட ' அசாம் மிளகாய் ' காரம் 10 லட்சம் யூனிட்கள் அதிகம் .இதிலிருந்து நாம் சாறு எடுத்தால் அதன் காரம் வழக்கமான மிளகாயை விட கிட்டத்தட்ட 5 ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் . மிளகை விட அதிகபட்சம் 8 ஆயிரம் மடங்கு காரத் தன்மை கொண்டது .
அசாம் மிளகாயை சாப்பிட ஆரம்பிக்கும் முன்னர் , அந்த மிளகாயில் 2 ஐ எடுத்து , தன் கண்களில் தேய்த்துக் கொண்டார் .
அனந்திதாவின் சாதனைக்கு முன்னதாக அவரது டேபிளில் வைக்கப்பட்டிருந்த மிளகாயைக் கடித்துப் பார்த்த இங்கிலாந்து சமையல் கலைஞர் ராம்சே , ' அய்யோ சாமி , ஆளை விட்டா போதும் இது ரொம்பவும் காரம் ' என்று கமென்ட் அடித்தார் . இப்போது சொல்லுங்கள் இது கின்னஸ் சாதனைதானே .
--- தினமலர் . 12 - 04 - 2009 .

No comments: