Saturday, June 6, 2009

ஆஸ்கார் விருதும் .குப்பத்து நாயும்

உலக அளவில் செல்வந்தர்கள் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகையே , இந்தியாவில் இருந்து உருவாகிவரும் கோடீஸ்வரர்களை அடையாளம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது . ஆனால் , சமீபத்தில் வெளியான ' ஸ்லம்டாக் மில்லியனர் ' படம் போர்ப்ஸ் பத்திரிகை செய்தியை பொய் என்று சொல்லாமல் சொல்லிவிட்டது . அதாவது , போர்ப்ஸ் பத்திரிகையில் வரும் செல்வந்தர்கள் பட்டியலில் இடம் பெறும் இந்தியர்களுக்கு அறிவும் , ஆற்றலும் இல்லை . குருட்டு அதிர்ஷ்டம் காரணமாகவே இவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்று மூக்கில் குத்தியது போல் கூறியுள்ளது .
உலக அளவில் இந்தியர்கள் மனித உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள் . இது உலக நாடுகள் ஒப்புக்கொண்ட உண்மை . ஐரோப்பா , அரபு நாடுகள் , கிழக்காசிய நாடுகளை வளப்படுத்தும் பணிகளில் , மழை , வெயிலில் அயராது உழைப்பவர்கள் தமிழர்களே , இந்தியர்களே . ஆனால் , ஹாலிவுட்காரர்கள் இந்தியர்களை குப்பத்து நாய் என்று தைரியமாக சொல்லி , அதை படம் பண்ணி காசு பார்த்து விட்டார்கள் . ' சபாஷ் , உலக அரங்கில் வேகமாக முன்னேறிவரும் இந்தியர்களை சரியாக மட்டம் தட்டினீர்கள் ' என்று ஹாலிவுட் சினிமா உலகம் பாராட்டி , அதற்கு ஆஸ்கார் விருதும் கொடுத்துள்ளார்கள் . இந்தியர்களை சினிமா மூலம் திட்டினால் கண்டுகொள்ள மாட்டார்கள் , மகிழ்ந்து கூத்தாடுவார்கள் என்று புரிந்து கொண்டு , நமது ஊரில் சினிமா எடுத்து , நம்மையே மட்டம் தட்டி பெருமை அடைந்திருக்கிறார்கள் ஹாலிவுட் சினிமாக்காரர்கள் .அந்தப் படத்தை இசையால் தத்ரூபமாக்கியதற்காக நம்மவருக்கு ஆஸ்கார் விருது கொடுத்திருக்கிறார்கள் . வாழ்க சினிமா .
--- சந்திரசேகரன் , அரியலூர் . தினமலர் , 06 - 03 -2009 .

No comments: