Saturday, December 12, 2009

பஞ்ச பத்ர பாத்திரம் .

இல்லங்களில் பூஜையின்பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம் . அதன் இயற் பெயர் ' பஞ்ச பத்ர பாத்திரம் ' என்பதாகும் . அதாவது , ஐவகை பத்திரங்களை ( இலைகள் ) நீரில் இட்டு அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு , உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர் . துளசி , அருகு , வேம்பு , வில்வம் , வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் . இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம் ' பஞ்ச பத்ர பாத்திரம் ' . இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது
---- தினகரன் , 01 - 08 - 2009 .

No comments: