Friday, December 25, 2009

தெரிந்து கொள்வோம் !

* கறுப்பு நிறங்கொண்ட பெண் சிலந்தி உடலுறவு கொள்ளும்போதே ஆணைச் சாப்பிட்டுவிட்டு விதவையாகவும் ஆகிவிடுவதால் , அதற்கு Black widow என்று பெயர் .
* ஆமைகள் சாதாரணமாகவே 100 வயதுக்கு மேல் வாழும் என்பதால் நீண்டகால செக்ஸ் வாழ்க்கை ! ஆமைகளுக்கு இரண்டு மூக்குகள் உண்டு . முகத்தில் ஒன்று , மற்றது , மலத்துவாரத்தில் இரண்டு பக்கங்களும் ஆமை மூச்சுவிடும் .
* கோழி போடுகிற ஒவ்வொரு பத்தாவது முட்டையும் , அதற்கு முன்பு போட்ட முட்டைகளை விட , சற்று பெரிதாக மாறுபட்டு வித்தியாசமாக இருக்குமாம் .
* ஒரு மணி நேரத்துக்கு 60 நிமிடங்கள் , ஒரு நிமிடத்துக்கு 60 நொடிகள் என்று நிர்ணயித்தவர்கள் பாபிலோனியர்கள் .
* ஏதென்ஸ் நகருக்கு அருகிலுள்ள ஒரு தோட்டம் அகடமஸ் என்ற பெயரில் இருந்தது . இங்குதான் பிளேட்டோ போன்ற தத்துவவாதிகள் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்தார்களாம் . நாளடைவில் இத்தோட்டத்தின் பெயராலேயே ' அகாடமி ' என்ற சொல் உருவானது .
* ஆறு கால் கொண்ட உயிரினங்ககளில் மிகவும் வேகமானது கரப்பான் பூச்சி . ஒரு வினாடியில் ஒரு மீட்டர் தூரத்தை அதனால் தாண்ட முடியுமாம் .
* சிங்கம் குட்டிகளாக இருக்கும் போது ஆணும் , பெண்ணும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் . மூன்று வயது ஆன பிறகுதான் ஆண் சிங்கத்திற்கு பிடரி மயிர் முளைக்க ஆரம்பிக்கும் .
* நாய் சந்தோஷத்தில் வாலை ஆட்டும் . கோபத்தில் காதை விரைத்துக் கொள்ளும் . பூனை நேர்மாறாக சந்தோஷத்தில் காதை விரைத்துக் கொள்ளும் , கோபத்தில் வாலை ஆட்டும் . அதனால்தான் தவறான புரிதலில் பூனையும் நாயும் மோதிக் கொள்கின்றன .

No comments: