Wednesday, December 30, 2009

ஹைக்கூ .

* யார் யார் வேண்டுதலுக்கோ கோவில் முன்பு தீக்குளிக்கிறது , ' கற்பூரம் '.
* தவறான வழியில் குழந்தை பிறந்தது , சிசேரியன் .
* ஊர் சுற்றுவது நான் தண்டனை என் செருப்புக்கு , வீட்டுக்கு வெளியே
* விலை குறைத்தே விற்றிருக்கலாம் மிஞ்சிப் போய் வீணாய்ப் போனதும் தோன்றியது , பூ வியாபாரிக்கு .
* கருவறையே கல்லறையாகும் விந்தை , கருத்தடை மாத்திரை .
* மனதை அடக்கினால் தியானம் . மனம்போல் ஆடினால் மயானம் .
* உன்னுள் இருக்கும் என்னைப் பிரித்து , உரசி , சண்டை மூட்டி அதில்... பசி ஆறுகிறான் மனிதன் தீப்பெடியில் தீக்குச்சி !
* ' நேரம் ' சரியில்லை என்று அலுத்துக் கொண்டார் கடிகார வியாபாரி !
* பட்டியலில் இல்லா உலக அதிசயம் - விதைக்குள் உறங்கும் மரம் .
* சுவர் இருந்தும் சித்திரம் வரைய முடியவில்லை எய்ட்ஸ் நோயாளி .
* உன் கூந்தல் அருவி என்பதால்தான் ' கொட்டு ' கிறதோ தலைமுடி ?
* எவ்வளவு உழைத்தும் வியர்வை வரவில்லை மின்விசிறிக்கு .
* மருத்துவர் பிரசவம் பார்த்தார் மணிபர்ஸ் .
--- பாக்யா , ஜூலை 31 - ஆக்ஸ்டு 6 .-- ஆகஸ்டு 14 - 20 ; 2009 .-- செப்ட 18 - 24 ; 2009 .

No comments: