Tuesday, December 29, 2009

முத்துக்குவியல் .

பஞ்சகன்னியர்..... அகலிகை , சீதை , தாரை , திரெளபதி , மண்டோதரி .
பஞ்சசீலம்.............கொல்லாமை , கல்லாமை , இரவாமை , காமமின்மை , பொய்யாமை .
பஞ்சபட்சி..............வல்லூறு , ஆந்தை , காகம் , கோழி , மயில் .
பஞ்சபுரானம் ........தேவாரம் , திருவாசகம் , திருவிசைப்பா , பெரியபுராணம் , திருப்பல்லாண்டு .
பஞ்சரத்தினம் ......வைரம் , முத்து , நீலம் , மரகதம் , மாணிக்கம் .
பஞ்சவர்ணம்........வெண்மை , கருமை , பசுமை , செம்மை , பொன்மை .
பஞ்சாங்கம்...........கரணம் , திதி , நட்சத்திரம் , யோகம் , வாரம் .
பஞ்சநாதம் ..........சங்கு , சக்கரம் , கத்தி , வில் , கதை .
பஞ்சதேவர்..........விஷ்ணு , பிரம்மா , உருத்திரன் , மகேசுவரன் , சதாசிவன் .
பஞ்சசிகை........... தலை , உச்சி , கண் , புருவம் , முழங்கை .
பஞ்சபரமோட்டி...அருகர் , சித்தர் , ஆசிரியர் , குருக்கள் , உபாத்தியாயர் .
பஞ்சமேளம் ........சங்கு , தவில் , ஜாலர் , பம்பை , மத்தளம் .
பஞ்சபாண்டவர்...தருமன் , பீமன் , அர்ச்சுனன் , நகுலன் , சகாதேவன் .
பஞ்சமூலம்.........செவ்வியம் , சித்திமூலம் , பேரரத்தை , சுக்கு , கண்டுபாரங்கி .
--தொகுப்பு : எஸ் . ராஜேந்திரன் , அருட்செல்வர் சேக்கிழார் , ஆகஸ்ட் 2009 .

No comments: