Saturday, December 26, 2009

ஈஷா பள்ளி .

ஈஷா பள்ளியில் எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் என்னிடம் கேட்டான் , " சத்குரு , வாழ்க்கை என்பது கனவா ? நிஜமா ?"
நான் சொன்னேன் , " இந்த வாழ்க்கை ஒரு கனவுதான் . ஆனால் , இந்தக் கனவு நிஜம் !"
ஜென் கதைகள் .
சாக்கிய முனி கேட்டார் , " ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு ? " முதல் சீடன் சொன்னான் , " 70 வருடங்கள் " இரண்டாவது சீடன் சொன்னான் , " 60 வருடங்கள் ". அடுத்தவன் சொன்னான் ,
" இல்லை. 50 வருடங்கள் ".
" நீங்கள் சொன்ன பதில்கள் எல்லாமே தவறு " என்றார் சாக்கிய முனி . " வாழ்க்கை என்பது ஒரு சுவாச அளவுதான் ".
---சத்குரு ஜக்கி வாசுதேவ் . ஆனந்தவிகடன் , 19 - 8 - 2009.

No comments: