Friday, July 9, 2010

திப்புசுல்தான் .

திப்புசுல்தான் ஒரு பெரும் வீரன் மட்டுமல்ல, அருமையான தலைமைப்பண்புகள் நிறைந்த மன்னனும்கூட . ராக்கெட், ஏவுகணை தொழில் நுட்பத்தை நமது நாட்டுக்கு முதலில் கொண்டு வந்தவன் என்றுகூடச் சொல்லலாம் . 1799 ம் ஆண்டு நடந்த யுத்தத்தில் அவன் பிரிட்டிஷ் ராணுவத்தால் கொல்லப்பட்ட பிறகு, திப்புவின் ஆயுதக் கிடங்கில் இருந்த நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் , ராக்கெட் உதிரி பாகங்களையும் கண்டு ஆங்கிலேயர்கள் மிரண்டே போனார்கள் . அந்த தொழில்னுட்பத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அந்த ராக்கெட்டுகளை இங்கிலாந்துக்கு எடுத்துப் போனார்கள் .வெள்ளைக்காரர்கள் . அந்த அடிப்படையை வைத்துத்தான் அவர்கள் ராக்கெட் டெக்னாலஜியில்முன்னேற ஆரம்பித்தார்கள் . திப்பு எத்தனை படைப்புத் திறன் கொண்ட தலைவன் என்று யோஜித்துப் பாருங்கள் .
--- ஆர். கே. ஸ்வர்ணலதா , கிருஷ்ணகிரி. தினமலர் . இணைப்பு . டிசம்பர் 11 , 2009 .