Saturday, July 31, 2010

கெர்ஜர் பாலம் !

ராமேஸ்வரம் -- பாம்பன் ரயில் பாலத்தைதான் கெர்ஜர் பாலம் என்கிறார்கள் . ஜெர்மன் இஞ்சினியரான கெர்ஜர் கட்டியதால் இந்த பாலம் அவரது பெயரால்லேயே அழைக்கப்படுகிறது . இந்த ரயில் பாலத்தை கட்டும் பணி , 1913ல் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் முடிவடைந்தது . 2.06 கி. மீட்டர் நீளமுள்ள இந்த ரயில் பாலத்தில் 145 தூண்கள் உள்ளன . கப்பலோ , பெரிய படகோ வரும்போது , இந்தபாலம் திறந்து அவைகளுக்கு வழிவிடும் ! இந்தக் கண்கொள்ளா காட்சியை பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் வருகிறார்கள் . 1964ம் ஆண்டு புயலில் இந்த பாலம் பலத்த சேதமடைந்தது . இருப்பினும் 3 மாதத்தில் சரிசெய்யப்பட்டு மீண்டும் ரயில்போகுவரத்து தொடங்கப்பட்டது . கடந்த 2006ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் , இந்த ரயில்பாலத்தை அகல ரயில்பாதையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியதை அடுத்து இப்பாலம் அகலரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது .
--- கே. எஸ். பாலகிருஷ்ணன் . தினகரன் , 26. 02. 2010 .

No comments: