Wednesday, July 14, 2010

கண் இமைகள் .

கண்விழிகள் , எண்ணையில் மிதக்கும் பந்து போன்றவை . உராய்வு இல்லாத அசைவுக்கு ' லூப்ரிகன்ட் ' என்ற எண்ணைப்பொருள் தேவை .
நமது இமைகளின் நடுவில் லூப்ரிகன்ட் எண்ணையை உற்பத்தி செய்யும் 20 முதல் 30 செபாகியஸ் சுரப்பிகள் உள்ளன . இமைகள் சிமிட்டப்படும் போது சுரப்பிகளில் இருந்து லூப்ரிகன்ட் விழிகளின் மீதாக கசியும் . இதனால், தங்குதடங்கல் இல்லாமல் விழிகள் சுலபமாக அசையும் . இமைகள் அசையாவிட்டால் , லூப்ரிகன்ட் கிடைக்காமல் கண்கள் வறண்டு விடும் !
இமைகள் அசைவதால்தான், தூசிகள் கண்ணுக்குள் நுழைந்து எரிச்சலூட்டாமல் இருக்கின்றன .
இமைகள் மிக வேகமாக திறந்து மூடுவதால்தான் , மூடும் வேளையில் பார்வை மறைவதில்லை .
இமைகளின் அசைவு, அனிச்சை செயல் . அதாவது, இதயம் துடிப்பது போல், மூச்சு விடுவது போல் தானாக நடக்கும் செயல் . இது , கண்களைப் பாதுகாக்க இயர்கை அளித்த வரம் .
--- தினமலர் . இணைப்பு . பிப்ரவரி , 12 . 2010 .

No comments: