Wednesday, July 21, 2010

அழாதே !

கல்லாமையை நினைத்து
கண்ணீர் வடிக்கும் ஒருவன்
குப்பையில் கிடந்த
காகிதம் எடுத்து
கண்ணீரைத் துடைக்கிறான்
காகிதம் சொல்லுகிறது
" படிக்காமல் நீ கிழித்தெறிந்த
புத்தகத்தின் தாள்தான் நான் "
--- கவி. அக்பர்தீன் , பண்டாரவாடை. தினத்தந்தி , இணைப்பு . 13. 02. 2010 . இதழ் உதவி : N. G. கலியபெருமாள். திருநள்ளாறு.

No comments: