Monday, July 12, 2010

யானை மொழி !

சமீபத்தில் யானை எழுப்பும் ஒலிகளை ஆராய்ச்சி செய்து பல சுவாரஸ்யமான உண்மைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள் அலறல், பிளிறல், உறுமல் என்று மூன்று வகைகளில் யானைகள் பேசுகின்றன . இதைவிட மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா ? 5-30 ஹெர்ட்ஸ் என்கிற ஒலி அலை வரிசையில் இவை எழுப்பும் குரலை மனிதனுடைய கேட்கும் சக்தித் திறனால் கேட்கவே முடியாது . இது இன்ப்ரா சத்தம் என்று அழைக்கப்படுகிறது . வவ்வால்களும் இந்த .ஒலி அலைவரிசையையையே பயன்படுத்துகின்றன .
குட்டியை பிரசவித்த பின் தன்னுடைய பலவீனமான நிலையைச் சொல்லும் வகையில் தாய் யானை ஒரு விதமான சத்தத்தை எழுப்பியபடி இருக்கும் .அந்த நேரத்தில் அதன் அருகில் செல்வது ஆபத்தானது . சில சமயங்கலில் யானைக் கூட்டங்கலுக்கு இடையே சண்டை நடக்கும் . அப்போது அவை எழுப்பும் ஒலிகள் உக்கிரமாக இருக்கும் . வவ்வால்களும் இந்த .ஒலி அலைவரிசையையையே பயன்படுத்துகின்றன .
குட்டி யானைகள் தங்கள் காலால் பூமியைத்தட்டி ஒலி எழுப்புவதன் மூலம் தாய்க்கு அதன் தேவைகளை உணர்த்துகின்றனவாம் .
--- ஏ. முத்து , வாழப்பந்தல் . . தினமலர் . இணைப்பு . ஜனவரி 8 . 2010 .

No comments: