Sunday, October 3, 2010

அட்சய திருதியை !

அட்சய திருதியை நாளில் நடந்தவை .
* பரசுராமர் அவதரித்ததும், கிருத யுகம் தோன்றியதும் அட்சய திருதியை நாளில்தான் .
* இந்தியாவின் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை, சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வந்தது ஒரு அட்சய திருதியை அன்றுதான் .
* திரவுபதையின் மானம் காக்க கிருஷ்ண பரமாத்மா அவளுக்கு அட்சய வஸ்திரம் அளித்தது அட்சய திருதியை நாளில்தான் என்கிறார் மகாபாரதம் தந்த வியாசர் .
* மதுரை மீனாட்சியை, சுந்தரேஸ்வரர் மணந்த நாள், அட்சய திருதியை தான் .அதனால்தான் இந்த நாள் திருமணத்திற்கு உகந்தது என்று கூறுவோரும் உண்டு .
* பிரம்மதேவன் பூமியை படைத்ததும் இந்த நாளில்தான் .
* மகாபாரத காலத்தில் சூரியன் ஒரு அட்சய பாத்திரத்தை திரவுபதிக்குக் கொடுத்தான் . அதுவும் இதே நாளில்தான் !
* காசி அன்னபூரணி, சிவபெருமானுக்கு அன்ன பிட்சை அளித்ததும், ஐஸ்வரிய லட்சுமி உதயமானதும் இதே நாளில்தான் .
--- தினத்தந்தி , ஆன்மிகம் . 11. 05. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு.

No comments: