Wednesday, October 20, 2010

சிலந்தி வலை !

இயற்கையின் மகா ஆச்சர்யங்களில் சிலந்தியும் ஒன்று . 65 அடி அகலத்துக்கு , ஆயிரத்துக்கும் மேற்பட்ட ' ஜங்ஷன் 'களோடுகூடிய ஒரு சிலந்தி வலையைக் காட்டில் ஆய்வாளர்கள் பார்த்துப் பிரமித்து இருக்கிறார்கள் . ஒரே ஒரு சிலந்தி கட்டிய வலை !
சிலந்தியின் வயிற்றில் இருந்து பீச்சியடிக்கப்படும் திரவம்தான் , வலை பின்னப் பயன்படும் நூல் . உடலில் இருந்து திரவமாக வெளியேறிய மறு விநாடி, திடமாக மாறிவிடுகிற இழை அது . ( உதாரணமாக , மனிதன் நம்பர் 1 போகிறான் . வெளியேறும்போதே சிறுநீர் திடப் பொருளாக மாறிவிட்டால் எப்படி இருக்கும் ?!. ஆனால், 50 ஆயிரம் வகையான சிலந்திகளில் பெரும்பான்மையானவை வலை பின்னுவது இல்லை என்பது வேறு விஷயம் . சரி , சிலந்தி -- தன் வலையில் சிக்காததற்கு -- ஆச்சர்யமாக இருக்கும் . அது தனக்காக ஸ்பெஷலாக ' நூல் பாதை ' போட்டுக்கொள்கிறது . அதன் வழியாகத்தான் அது போகும் . அந்த நூலில் அதன் கால்கள் ஒட்டிக்கொள்ளாது . ஒட்டிக்கொண்டால் சிலந்தி இனம் என்பதே இருந்திருக்காது !
--- ஹாய் மதன் , ஆனந்த விகடன் . 07. 04. 2010.

No comments: