Saturday, October 9, 2010

பசு பராமரிப்பு .

பழங்காலத்தில் பசு மாடுகள் கட்டப்படும் தொழுவத்தைக் கோயிலாக கருதியிருக்கிறார்கள் .ஆக்கோட்டம் என்று அவற்றை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன . காலப்போக்கில் பசுத்தொழுவங்களை பசுமடம் என்று அழைக்கலாயினர் .
பசு மாட்டுத் தொழுவத்தை எப்படி அமைக்க வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைகள் பல உண்டு .
நல்ல காற்றோட்டம், சரிவான அமைப்பு, மிதமான சீதோஷ்ணம் உடைய நிலையில் மண்தரை அமைக்கப்பட வேண்டும், அந்த மண் தரை ஆற்று மண் , புற்று மண் , ஓடை மண் , அரச மரத்தடி மண் , வில்வ மரத்தடி மண் என்னும் ஐவகை மங்கள் கலந்ததாய்த் தூய்மையானதாய் அமைக்கப்படவேண்டும் .
--- புலவர் வே. மகாதேவன் , தினமலர் , மே 16 . 2010 .

No comments: