Wednesday, October 13, 2010

வி. எஸ். காண்டெகர் .

விபரீதமான கேள்வி -- புத்திசாலித்தனமான பதில் !
" புகழ்பெற்ற மராட்டிய எழுத்தாளர் வி. எஸ். காண்டெகர் . அவருடைய மகன் ஒருநாள் பள்ளியிலிருந்து சீக்கிரமாகவே வீட்டுக்குத் திரும்பிவிட்டான் . ' என்ன சீக்கிரம் ?' என்று கேட்டார் காண்டேகர் . ' யாரோ ஒரு தலைவர் இறந்துவிட்டாராம் . அதனால் பள்ளிக்கு விடுமுறை ' என்றான் . அதோடு விடவில்லை , ' தலைவர்கள் இறந்தால் கட்டாயம் விடுமுறை விட வேண்டுமா ? ' என்று கேட்டான் . ' புகழ் பெற்றவர்கள் இறந்தால் விடுமுறை விடுவது மரபு ' என்றார் காண்டேகர் . உடனே, அந்த விபரித்மான கேள்வியைக் கேட்டான் சிறுவன் . ' அப்படி என்றால் , நீங்கள் இறந்தாலும் விடுமுறை விடுவார்களா ? ' ஒருகணம் திகைத்த காண்டேகர், ' யாருக்கு விடுமுறையோ இல்லையோ கண்டிப்பாக உனக்கு விடுமுறை ' என்றார் !"
--- கோ. ஞானகுரு , விருதுநகர் . ஆனந்த விகடன் , 05. 05. 2010.

No comments: