Monday, October 4, 2010

மனிதன் மட்டும் !

விதைகளிலிருந்து
எழுந்திருக்கும் விருட்சம்
அடுத்த விருட்சங்களை நம்பி,
கிளைகளை விரிக்கவில்லை !
கிளைகளிலிருந்து
எழுந்திருக்கும் பறவை
அடுத்த பறவைகளை நம்பி
சிறகுகளை விரிக்கவில்லை !
சிறகுகளிலிருந்து
எழுந்திருக்கும் நம்பிக்கை
அடுத்த நம்பிக்கைகளை நம்பி
கரங்களை விரிக்கவில்லை !
தாயின் கருவறையிலிருந்து
எழுந்திருக்கும் மனிதன் மட்டும்
அடுத்தவர்களை நம்பி நம்பியே
வாழ்ந்து தோற்கிறானே.....?!
--- பொட்ட்ல்குழி ரா. ரெத்தினமணி, பாளை மத்தியச்சிறைச்சாலை. தினத்தந்தி , 09. 05. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு.

No comments: