Thursday, October 14, 2010

மனநோய் மருத்துவமனை !

தேர்வு வைக்க புத்திசாலித்தனம் தேவை .
" ஒரு மனநோய் மருத்துவமனையைப் பார்வையிட இரண்டு பத்திரிகையாளர்கள் வந்து இருந்தார்கள் . ' மனநோய் சரியாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் ? ' என்று தலைமை மருத்துவரிடம் கேட்டார்கள் . அதற்கு அவர் , ' மருத்துவமனைக் குழாயின் அடியில் ஒரு அண்டாவை வைப்போம் . பின்பு குழாயைத் திறந்துவிடுவோம் . நோயாளிகளிடம் ஒரு வாளியைக் கொடுத்து அண்டாவில் உள்ள நீரைக் காலி செய்யச் சொல்வோம் ' என்றார் . குழம்பிய பத்திரிகயாளர்கள் , ' இதிலிருந்து அவருக்கு மனநோய் சரியாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் ? ' என்று கேட்டார்கள் . ' மனநோய் சரியாகி இருந்தால் முதலில் அவர்கள் குழாயை மூடிவிடுவார்கள் ' என்றார் ! "
--- அ. பேச்சியப்பன், ராஜபாளையம் . ஆனந்த. விகடன் , 05. 05. 2010.

No comments: