Thursday, November 13, 2014

தெரியுமா? தெரியுமே!

*  கேதார விரதம் என்பது புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தொடங்கி,  21 நாட்கள் தீபாவளி வரை மேற்கொள்ள வேண்டியதாகும்.
*  ஆற்று மணலில் வெட்டப்படும் ஊற்றுக்கு என ஒரு விசேஷமான குணம் உண்டு.  தோண்டப்படும் பக்கத்தில் நீர் வேகமாகப் போகும்.  ஆனால்,
   அதேநேரத்தில் இன்னொரு பக்கம் தூறும்.
*  எண்ணெயைச் சொரிந்து தேய்க்க வேண்டும்.  கல்வியை வருந்திக் கற்க வேண்டும்.
*  எறும்பு முதலாக யானை ஈராக 84 லட்சம் உயிரினங்கள் உண்டு என்பர் பெரியோர்.
*  எறும்புக்கு பல விசேஷ சக்திகள் உண்டு. அவற்றுள் ஒன்று பெரும்மழை வெள்ளம் வரும் என்பதனை அறியும் தன்மை.
*  எறும்பு வழிபட்ட தலம் திருவெறும்பூர்.  திருச்சிக்கு அருகில் உள்ளது.  மலைமேல் கோயில்.  125 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.  இந்திரனும் தேவர்களும்
   எறும்பு வடிவில் வழிபட்டதால் பிப்பிலேஸ்வரர், எறும்பீஸ்வரர் என்றெல்லாம் சொல்லப்படுகிறார்.
*  தமிழகத்தில் அறுபத்து மூவருக்கென அமந்த ஆலயம் திருப்பனந்தாள் மட்டுமே ( கும்பகோனத்திற்கு அருகில் உள்ளது இந்த திருத்தலம் ).

No comments: