Monday, November 24, 2014

வணக்கங்கள் பலவிதம்

 உயர்ந்தவர்களை வணங்குவதில் பலவிதமான முறைகள் உண்டு.  ஒரு கையால் வணங்குதல் ஏகாங்க நமஸ்காரம் எனப்படும். இது இக்காலத்திய சல்யூட் போன்றது. வலது கையை மட்டும் எடுத்துத் தலை மீது வைத்து வணங்குவது ' துவிதாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  இரண்டு கைகளையும் தலை மீது வைத்து வணங்குவது ' திரிவிதாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டி, தலை ஆகியவற்றால் வனங்குவது பஞ்சாங்க நமஸ்காரம் எனப்படும்.  இது பெண்களுக்குரிய வணக்க முறையாகும்.  இரண்டு கால்கள், இரண்டு கைகள், இரண்டு காதுகள், தலை, மார்பு ஆகியவற்றை பூமியில் பதித்து எட்டு அங்கங்களால் வணங்குவது ' அஷ்டாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  நெடுஞ்சாண் கிடையாக எல்லா உறுப்புகளும் தரையில் படும்படி  வணங்குவது ' சாஷ்டாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  இதுவும் ஆண்களுக்குரிய வணக்க முறையாகும்.
---   தினமலர் பக்திமலர்.  பிப்ரவரி 14, 2013.  

No comments: