Tuesday, November 4, 2014

இதுவும் புண்ணியம்தான் !

  கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் இறை அடியார்களை,  நம் வீட்டு விருந்தினர் போலப் பாவித்து சில பணிவிடைகளைச் செய்வதிலும் புண்ணியம் உண்டு.
     அப்படி செய்ய வேண்டிய பணிவிடைகள் எவை என தெரிந்து கொள்ளுங்கள்:
ஆசனம்  --  அமர்வதற்குத் தவிசு அளித்தல்.
பாத்யம்  --  கால் அலம்ப நீர் தரிதல்.
அர்க்யம்  --  கை கழுவ நீர் தருதல்.
ஆசமணீயம்  --  பருகுவதற்கு நீர் வழங்குதல்.
அபிஷேகம்  --  திருமுழுக்கு நீர் ஆட்டுதல்.
வஸ்திரம்  --  அணிந்து கொள்ள ஆடைகள் வழங்குதல்.
கந்தம்  --  நறுமணப் பொருட்கள் தருதல்.
புஷ்பம்  --  மலர் மாலைகள் சூட்டுதல்.
தூபம்  --  அகில், சந்தனம் முதலிய நறுமணப் புகையிடுதல்.
தீபம்  --  ஒளி விளக்குகள் ஏற்றி மும்முறை வலமாகச் சுற்றுதல்.
      இப்படி பல வகையான பணிவிடைகள் செய்வதும்,  கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் நாம் வாழும்போதே தேடிக் கொள்ளும் புண்ணியச் செயல்களாகும்.
-- தேவராஜன்.
-- தினமலர் . வாரமலர். 12 . 05. 2013.

No comments: