Wednesday, September 14, 2016

ஆட்டோ வாசகங்கள்

"மனதைக் கவர்ந்த ஆட்டோ வாசகங்கள்?"
"இதோ...
* உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதைவிட , உலகமே உன்னை எண்ணும் அளவுக்கு இரு !
* முதுகுக்குப் பின்னால் ஒரே ஒரு காரியம் மட்டும் செய்யலாம். அது அடுத்தவரின் முதுகைத் தட்டிக்கொடுப்பதுதான் !
* கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல; அதிகமாக ஆசைப்படுபவனே ஏழை !
* உங்கள் கௌரவம் வேறு எங்கும் இல்லை; உங்கள் நாக்கு நுனியில்தான் இருக்கிறது!
* கடவுளின் பெயரை உச்சரிக்கும் உதடுகளைக் காட்டிலும், ஓர் ஏழைக்கு உதவும் கைகளே புனிதமானவை !
* கதவைத் தட்டாதவர்கள் எத்தனையோ வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள் !
-- மூ.சித்திரக்குமாரன், சென்னை.
"வாழ்க்கையின் தத்துவம் என்ன?"
" 'நீயாகப் பிறந்தாய், நீயாக வாழ்ந்து, நீயாகச் சாகிறாய். இதில் யாருக்கு என்ன பொறுப்பு?" ( நாலடியார் பாடல் ஒன்றின்
பொழிப்புரை இது!"
-- அ.யாழினி பர்வதம், சென்னை -78.
-- நானே கேள்வி... நானே பதில்...!
-- ஆனந்த விகடன். 30-7-2014.

No comments: