Wednesday, September 21, 2016

மந்திரமாவது என்ன?

ஒரே அட்சரம் உள்ள மந்திரங்கள் 'பிண்டம்' எனப்படும். இரு அட்சரம் உள்ளவை 'கர்த்தரீ' எனப்படும். மூன்று முதல் ஒன்பது வரை உள்ளவை 'பீஜம்' எனப்படும். பத்து முதல் இருபது அட்சரங்கள் உள்ளது 'மந்திரம்' எனப்படும். இருபது அட்சரங்களுக்கு மேல் உள்ளது 'காயத்ரீ' எனப்படும். நாம் விடுகின்ற மூச்சுக்கூட ஒரு மந்திரமாகும். இது 'அஜபா மந்திரம் எனப்படும். பஞ்சபூதங்களால் இயங்குவதே பஞ்சாட்சர மந்திரத்தின் தத்துவமாகும்.
லிங்கோத்பவ மூர்த்தி
பிள்ளையார்பட்டி குடைவரை கோயிலில் லிங்கோத்பவ மூர்த்தியின் சிற்பம் இடுப்பு வரை தூண் போன்ற அமைப்புடனும், மேல்பகுதி மனித உடலாகவும் காணப்படுகிறது. ஆறாம் நூற்றண்டைச் சார்ந்த சிற்பம் இது.
நவ பாஷாணங்கள்
திருமுருக பாஷாணம், கார்முகில் பாஷாணம், இந்திர கோப பாஷாணம், குங்கும பாஷாணம், லவண பாஷாணம், பவளப்புற்று பாஷாணம், கௌரிபாஷாணம், ரக்த பாஷாணம், அஞ்சண பாஷாணம் ஆகியவையே நவ பாஷாணங்கள்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். ஜூன் 1 - 15, 2014.

No comments: