Tuesday, September 6, 2016

தாய்ப்பால்

உலகிலேயே சிறந்த உணவு.
உலக தாய்ப்பால் வாரம் ( ஆகஸ்ட் 1 - 7 )
தாய்ப்பால்தான் குழந்தைக்கு உலகிலேயே சிறந்த உணவு. இதில் ஒப்பிட இயலாத பல பண்புகள் உள்ளன. அது குழந்தைக்கு முற்றிலும் பாதுகாப்பானது. தீங்கு செய்யும் பாக்டீரியாக்களும் மற்றக் கிருமிகளும் அதில் சேரவே முடியாது. இருமல், சளி, மார்பு நோய் போன்ற சில நோய்த் தொற்றுக்களில் இருந்து குழந்தைக்கு மிகச் சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியைத் தாய்ப்பால் அளிக்கிறது. குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் அதில் அடங்கியிருக்கின்றன. குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகும். வயிற்றுப் பிரச்னை எதுவும் ஏற்படாது. ஆஸ்துமா, எக்சியா போன்ற ஒவ்வாமைகளினால் பாதிக்கப்படுவது மிகக் குறைவு. அனைத்துக்கும் மேலாகக் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பிரத்யேகமான பாசப் பிணைப்பைத் தாய்ப்பால் ஏற்படுத்துகிறது. இது குழந்தையின் மனநிலையில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
-- டி.கார்த்திக். நலம் வாழ.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், ஆகஸ்ட் 5,2014.

No comments: