Sunday, September 18, 2016

'பேராபிலியா'

'பேராபிலியா' என்றால் என்ன?
இயற்கைக்கு மாறாக இல்லற சுகம் அடைவது 'பேராபிலியா நோய்' என்று அழைக்கப்படுகிறது. இதில் பல்வேறு வகைகள் உள்ளன. இதில் ஒன்று வாவூரிசம் என்ற வகை பாலியல் சார்ந்த நோய். இந்த நோய் உடையவர்கள், மற்றவர்கள் நிர்வாண நிலையில் இருக்கும்போது, அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பார்த்து ரசிக்கும் இயல்பு உடையவர்கள். இவ்வாறு செய்யும்போது, அவர்களுக்கு ஒரு வித சந்தோஷம் ஏற்பட்டு, முழுமையான இல்லறசுகம் அடைந்த திருப்தி அடைவார்கள். ரகசியமாக பார்க்கும்போது அவர்களே உறவில் ஈடுபடுவது போன்று கற்பனை செய்துகொள்வார்கள். இச்செயல்களில் ஈடுபடும் பெண்கள், அவர்களின் கணவரிடம் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில், இதுபோன்ற பாலியல் சார்ந்த நோய்க்கு ஆளாகிறார்கள்.
-- உளவியல் மருத்துவர் சச்சிதானந்தம், சென்னை. ( தேசம்).
-- - 'தி இந்து' நாளிதழ், புதன், ஆகஸ்ட் 20, 2014.

No comments: