Monday, September 26, 2016

கேள்வி - பதில்!

* "2014 -ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி முடிவுகள் பற்றி ஆரூடம் சொல்லவிருக்கும் விலங்கு எது?"
-- ஜெர்மனியைச் சேர்ந்த நெல்லி என்ற யானை. இரு நாட்டுக் கொடிகள் கட்டப்பட்ட இரண்டு கோல் கம்பங்களில் எதற்குள்
யானை பந்தை உதைக்கிறதோ, அந்த நாடு வெற்றி பெறும் என்பது ஆரூடம்!
* "நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தவர்கள் யார்...யார்?"
-- இருவர். அருண் ஜெட்லி மற்றும் ஸ்மிர்தி இரானி.
* "கார்த்தி சிதம்பரம் மீது சமீபத்தில் என்ன வழக்கு பதிவுசெய்யப்பட்டது?"
-- ராஜஸ்தானில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில், மாநில முன்னாள் முதலமைச்சர் அசோக்
கெலாட் , கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது!
* "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு மாதச் சம்பளம் எவ்வளவு?"
-- 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்!
* "பெங்களூரில் நடைபெறும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது?"
-- 17 ஆண்டுகள்!
-- நா.சிபிச்சக்ரவர்த்தி.
-- ஆனந்த விகடன், 25-6-2014.

No comments: