Thursday, September 1, 2016

தெரியாத விஷயங்கள்

* நாகலாந்தில் ஆண் குழந்தைப் பிறந்தால், உடனேயே வெந்நீரில் குளிப்பாட்டுவார்களாம். இந்த சூட்டை தாங்கினால்தான்
குழந்தை வீரனாக வளரும் என்பது அவர்களின் நம்பிக்கை.
* கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க உதவிய ராணி எஸபெல்லா தன் வாழ்நாளில் இரண்டே இரண்டு முறை
மட்டும்தான் குளித்திருக்கிறாராம்.
* இந்தையாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் 1707ம் ஆண்டு காரைக்காலுக்கு அருகே உள்ள தரங்கம்பாடியில்தான்
ஆரம்பிக்கப்பட்டது.
* பர்மாவில் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் ஆசி வேண்டி, உறவினர்கள் இறந்தவர் வீட்டில் ஒருவாரம் படுத்து
தூங்குவார்களாம்.
-- ஆர்.சரஸ்வதி, பூனாம்பாளையம்.
-- தினமலர். பெண்கள்மலர். பிப்ரவரி 21, 2009

No comments: