Friday, September 16, 2016

புதிர்

ஐ.ஏ.எஸ். தேர்வில் கேட்கப்பட்ட ரொம்ப எளிமையான ஆனால் குழப்பமான ஒரு கேள்வியைக் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஒரு பெண் பழக்கடையில் 200 ரூபாய்க்கு ஆப்பிள் வாங்கினாள். அது ஒரு அடக்க விலைக் கடை. பழம் வாங்கியதும் அந்தப் பெண் ஆயிரம் நோட்டு ஒன்றை கடைகாரரிடம் தந்தாள்.
அவரிடம் சில்லரை இல்லாததால், பக்கத்துக் கடைகாரரிடம் மாற்றி , 800 ரூபாயை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, 200 ரூபாயைக் கல்லாவில் போட்டுக் கொண்டார்.
கொஞ்ச நேரம் கழித்து, பக்கத்துக் கடைக்காரர், 'அந்தப் பெண் கொடுத்தது, கள்ள நோட்டு என்று சொல்லி, பழக்கடைக்காரரிடம் அந்த 1000 ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு வேறு நோட்டை வாங்கிச் சென்றுவிட்டார்.
கேள்வி இதுதான் : பழக்கடைக்காரருக்கு எத்தனை ரூபாய் நஷ்டம்?
1. 200 2. 800 3. 1000 4. 1200 5. 1800 6. 2000 7. எதுவும் இல்லை.
சரியான விடைச் சொல்லுங்கள் பார்க்கலாம்!
-- அரசு பதில்கள்.
-- குமுதம். 11- 6 - 2014.

No comments: