Thursday, September 22, 2016

சாயா மரம்!

ராமநாதபுரம் வழிவிடும் முருகன் கோயிலில் 'சாயா' என்றொரு மரம் உள்ளது. சனீஸ்வரனின் தாயார் பெயர் கொண்ட இம்மரத்தை வழிபட்டால் துயர் நீங்கும் ; பாவம் விலகும்.
முப்பத்து முக்கோடி தேவர்கள்!
குருவாயூர் கோயிலில் சாயங்காலம் மட்டுமே தீபாராதனை செய்யப்படுகிறது. ஏழு அடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத்திரி விளக்கு என்று பல விளக்குகளை ஏற்றி ஆராதிக்கிறார்கள். இறுதியில் கற்பூர ஆரத்தி. அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் குருவாயூரப்பனை வழிபடுவதாக ஐதீகம்.
ஐம்பெரும் தெய்வம்!
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் பள்ளியறை பூஜையின் போது ஒருநாள் வள்ளி நாயகியுடனும், ஒரு நாள் தெய்வானையுடனும் முருகப் பெருமான் பள்ளியறைக்கு எழுந்தருளுகிறார். இது வேறெங்குமே இல்லாத தனிச் சிறப்பாகக் கருதப்படுகிறது.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். ஜூன் 1 - 15, 2014.

No comments: