Monday, April 20, 2009

செய்திச் சுடர் .

'கீதாஞ்சலி 'யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து , தாகூர் நோபல் பரிசு பெறக் காரணமாக இருந்தவர் ' ரோதென்ஸ்டின் ' என்ற ஆங்கில அறிஞர் .
அண்டார்டிகாவில் உள்ள இந்திய ஆரய்ச்சி நிலையத்தின் பெயர் - தட்சிண கங்கோத்திரி .
மருதாணி சிவக்க காரணமான நிறமி - லாஸோன் .
நாய்களுக்கு வியர்வை சுரப்பிகள் - அதன் பாதங்களில் உள்ளன .
' கற்பூரம் ' - லாரல் மரத்திலிருந்து பெறப்படுகிறது .
ஹீமோகுளோபின் இல்லாததால் - கரப்பான் பூச்சியின் ரத்தம் வெள்ளை நிறமாக இருக்கிறது .
எல்லா உணவுப் பொருட்களிலும் - வைட்டமின் ' இ ' கலந்துள்ளது .
பருத்தியின் தாவரவியல் பெயர் - காஸிப்பியம் .
ஆந்தையால் - தன் விழிகளை அங்கும் , இங்கும் அசைக்க முடியாது .
எலி - ஒரு நாளில் சராசரியாக 10 மைல் தூரம் ஓடுகிறது .
ஒரு சிப்பியில் - முத்து வளர்வதற்குச் சுமார் 15 வருடங்களுக்கு மேலாகும் .
சர்க்கரையைவிட பன்மடங்கு அதிக இனிப்பு உள்ள ' சாக்கரின் ' - நிலக்கரியிலிருந்து எடுக்கப்படுகிறது
தன்னைவிட 30 மடங்கு கனமான எடைகளை எறும்புகளால் தூக்கிச் செல்ல இயலும் .

No comments: