Sunday, April 26, 2009

யோஜனை ! சலுகை ! கொட்டாவி !

விருந்தாளிகளுக்கு உபசரிப்பதற்காக ஒரு தட்டில் நாலைந்து ஜூஸ் டம்ளர்களை அல்லது தண்ணீர் டம்ளர்களை வைத்து எடுத்துச் செல்கிறீர்கள் . நடையின் அசைவில் ஜூஸ் அல்லது தண்ணீர் தளும்பி வழிகிறதா ? கவலை வேண்டாம் . ஒவ்வொரு டம்ளரிலும் ஒரு ஸ்பூன் போட்டு எடுத்துச் செல்லுங்கள் : தளும்பாது .
தம்பிகளுக்கே சலுகை !
ராமாயணத்தில் பட்டம் கட்டிக்கொண்டவர்கள் எல்லாம் தம்பிகளாகவே இருப்பதைக் காணலாம் .
ராமன் காட்டுக்குச் செல்ல , தம்பி பரதனுக்குதான் முதலில் அரசாளும் உரிமை வருகிறது .
வாலி வதத்திற்குப் பிறகு , தம்பி சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாகிறான் .
ராவண வதத்திற்குப் பிறகு , ராவணனின் தம்பி விபீஷணன் இலங்கையின் அரசனாகிறான் .
-- ரகோத்தமாச்சார் சொற்பொழிவிலிருந்து .
ஆ.வி .21 - 01 - 2009 .
கொட்டாவி !
குழந்தை தாயின் வயிற்றில் 20 வாரக் கருவாக இருக்கும் போதே கொட்டாவி விடுவது தொடங்கிவிடுகிறது .
ஒவ்வொரு கொட்டாவியும் சுமார் 6 லிருந்து 7 நொடிகள் வரை நீடிக்கிறது . அப்போது இதயம் 30 தடவைகளுக்கு மேல் அதிகமாக துடிக்கிறது என்றும் கண்டுபிடித்தனர் . பிறகு , பறவைகள் , விலங்குகள் , மனிதர்களின் கொட்டாவிகளைத் தொடர்ந்து கண்காணித்ததில் விஞ்ஞானிகள் கண்ட உண்மை : கொட்டாவி மூளையின் வெப்பத்தை கட்டுப்படுத்தி , அதனைக் குளிர்விக்கிறது என்பதே . கொட்டாவியை ஒரு ' தெர்மோ ரெகுலேட்டர் ' என்கிறார்கள் விஞ்ஞானிகள் . ரத்த ஓட்டத்தைக் குளுமைப்படுத்தி மூளையையும் அதன் மூலம் ' கூல் ' படுத்துகிறதாம் கொட்டாவி .

No comments: