Saturday, April 25, 2009

அரச மரம் ! முன்னோர்கள் !

மரத்தைத் தெய்வமாக மதித்து வணங்கிய பழக்கம் இந்து மதத்தில் உண்டு . புராணங்கள் அரச மரத்தை மும்மூர்த்தி சொரூபமாகப் போற்றுகின்றன . அடிப்பகுதி பிரம்ம வடிவம் , நடுப்பகுதி விஷ்ணு சொரூபம் , மேல்பகுதி சிவ வடிவம் என்கிறது ஒரு சுலோகம் . மரங்களின் அரசனான அரச மரத்தை வலம் சுற்றி வணங்கும் போது :
மூலதோ பிரம்ம ரூபாய
மத்யதே விஷ்ணு ரூபிணே
அக்ரதச் சிவரூபாய
வ்ருக்ஷ ராஜாயதே நம :
என்ற சுலோகத்தைச் சொல்லி வணங்குதல் வேண்டும் .
தி. ம . பக்தி மலர் . ஜனவரி 15 . 2009 .
முன்னோர்கள் !
காக்கைக்கு உணவு இடுவது ஏன் ?
இறந்து போன முன்னோர்கள் எந்தப் பிறவியில் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியாது .
தெய்வமாக இருக்கலாம் , யாகம் மூலம் ப்ரீதி செய்கிறார்கள் . மனிதராக இருக்கலாம் , மனிதரை அமர்த்தி வணங்கி உணவிடுகிறார்கள் . பறவையாகவோ , விலங்காகவோ பிறந்திருக்கலாம் , வாயசம் எனப்படும் காக்கைதான் பித்ரு சொரூபம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது . எனவே , காக்கைக்கு உணவிடுகிறார்கள் . ரிஷியாக இருக்கலாம் , அர்க்யம் கொடுத்து வழிபடுகிறார்கள் . முன்னோர் பித்ரு லோகத்திலேயே இருந்தால் தர்பணம் அவர்களைச் சென்றடைகிறது . கீழே சிந்தும் எள்ளும் , தர்ப்பையும் அவர்கள் பைசாசமாக இருந்தால் அவர்களைச் சென்றடைகிறது என்பது சாஸ்திரம் . எனவெதான் திவச நாட்களில் காக்கைக்கு உணவிடுகிறோம் .
கயா முதலிய இடங்களில் செய்யும் விசேஷத் திவசத்தில் விஷ்ணு பாதத்துக்கு பிண்டமிடுவதற்கு முன் ஒரு தனி உருண்டையைக் காக்கைக்கு இடுவார்கள் .
-- மானஸ தெவதா . --- தி. ம. பக்தி மலர் . ஜனவரி 15 . 2009 .

No comments: