Monday, August 1, 2011

நிறுத்துங்கள் தலைவலி மாத்திரையை !

அனாசின், சாரிடான், பூருபென் என்று விதவிதமான வலி நிவாரண மாத்திரைகள் உள்ளன . இவற்றை ஒருமுறை சாப்பிட்டால் அதன் பாதிப்பு 5 ஆண்டுகளுக்கு இருக்குமாம் . அதனால் என்ன என்று கேட்பவர்களுக்கு அதிர்ச்சி பதில் காத்திருக்கிறது . அதாவது இத்தகைய வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிடும்போது, அந்த மாத்திரைகளில் உள்ள பனடால் என்ற ரசாயனம் மனித உடம்புக்குள் செல்கிறது . அது உடனடியாக கல்லீரலைத்தான் தாக்குவதால் உடல் செயல்பாடு பாதிக்கப்படுகிறது . சிறுநீரகப்பாதிப்பும் ஏற்படுமாம் . எனவே, இனி தலைவலி வந்தால் கண்டிப்பாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என்றும், மூலிகை தைலங்கள் மற்றும் இயற்கை மருந்துகளை சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அடித்துச் சொல்கிறார்கள் . சரி தலைவலி ஏன் ஏற்படுகிறது, என்றால் மூளையில் எலக்டிரான், இரும்பு தாதுக்கள் சமச்சீராக இல்லாதபோது தலைவலி ஏற்படும் . இதனை சரிசெய்ய இயற்கை வைத்தியங்கள் ஏராளமாக உள்ளன . அதாவது தலைவலி வந்துவிட்டால் அதிக அளவு தண்ணீர் குடித்தால் கண்டிப்பாக நிவாரணம் கிடைக்குமாம் . அதுபோல பணி நெருக்கடி, ரத்த அழுத்தம் காரணமாக தலைவலி வந்தால், ஒரு பாத்திரத்தில் சுடுநீர் எடுத்து அதன் உள்ளே கால்பாதங்களை வைத்து பதமாக மசாஜ் செய்தால் ஓடிப்போய்விடும் தலைவலி என்கிறார்கள் . --- -தினமலர் . அக்டோபர் 9 , 2010 .

No comments: