Saturday, August 20, 2011

டூ வீலர் திருட்டை தடுக்க ....

டூ வீலர் திருட்டை தடுக்க சாவிக்கு பதில் கைரேகை ! இரு சக்கர வாகனங்களின் திருட்டை தடுக்கும் வகையில் சாவியே இல்லாமல் பைக்கை இயக்கும் கருவியை கும்பகோணம் கல்லூரி மாணவர் விவேக்ராஜ் கண்டுபிடித்துள்ளார் . அந்த கருவி பற்றி விவேக்ராஜ் கூறுகையில் : " இந்த நவீன கருவியை பைக்கில் பொருத்தியவுடன் வீட்டில் உள்ள அனைவரது கை ரேகையும் பதிவு செய்ய வேண்டும் . அதேபோல் பைக் உரிமையாளரின் அனுமதியுடன் ரகசிய எண் அந்த இயந்திரத்தில் பதிவு செய்யப்படும் . கைவிரல் ரேகை மற்றும் ரகசிய எண்ணை மாற்றிக்கொள்ளவும் முடியும் . இந்த கருவியை பொருத்தியுள்ள வாகனத்தை மற்றவர்களால் உருட்டிக் கூட செல்ல முடியாத வகையில் 3 விதமான தானியங்கி பூட்டுகள் பயன்படுத்தப்படுகிறது . முதலாவதாக போர்க் லாக் . இந்த லாக் மூலம் வண்டியில் உள்ள போர்க் லாக் தானாக பூட்டிக் கொள்ளும் . இரண்டாவது பேக்வீல் லாக் . இந்த முறையால் வண்டியின் பின் சக்கரம் எந்த சூழ்நிலையிலும் சுற்றாத வகையில் பொருத்தப்பட்டுள்ளது . மூன்றாவதாக எந்த தொழில் நுட்ப முறையிலும் இல்லாத வகையில் பெட்ரோல் லாக் அமைக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் வண்டியை ஸ்டாட் செய்தால் மட்டுமே டேங்கிலிருந்து பெட்ரோல் வரும் . இதனால் வாகன திருட்டை தடுப்பதுடன் பெட்ரோல் திருட்டையும் முற்றிலுமாக தடுக்க முடியும் . இந்த 3 லாக்குகள் ஒரே நேரத்தில் திறக்க அல்லது பூட்ட கைரேகை அல்லது ரகசிய எண்ணை பயன்படுத்திலால் மட்டுமே முடியும் . --- தினமலர் . அக்டோபர் 19 , 2010 .

2 comments:

விழித்துக்கொள் said...

super aanaal enakku ondru mattum vilangvillai idhuvarai eththanaiyo ilam vinghyanigal kandupidiththa padaippugal ondrukooda naankandadhillai engey poyitru andhdha kandupidippugal.adhdhupogattum idhu
eppozhudhu sandhaikku varugiradhu

க. சந்தானம் said...

விழித்துக்கொள் , அவர்களுக்கு ! கூடிய விரைவில் அது சந்தைக்கு வரும் , என்று நம்புவோம் !