Thursday, August 18, 2011

ஒரு கடவுள் ஜோக் !

" எல்லாப் படைப்பிலும் நல்லதும் இருக்க வேண்டும், கெட்டதும் இருக்க வேண்டும் . அதுதான் என்னுடைய ஃபார்முலா " என்று நாரதரிடம் சொன்னார் கடவுள் . " புரியவில்லையே " என்று வழக்கம் போல் வம்பு செய்தார் நாரதர் . கடவுள் புன்னகைத்தார் . " நான் ஜப்பானைப் படைத்தேன் . அந்த நாட்டு மக்கள் அறிவில் சிறந்தவர்கள் . உழைப்பாளிகள் . ஆனால், அந்த நாட்டில் ஏராளமான எரிமலைகளையும் படைத்தேன் ." " ஆமாம் ". " உலகத்திலேயே செல்வச் செழிப்புள்ள நாடாக அமெரிக்காவைப் படைத்தேன் . அதே சமயம் பாதுகாப்பின்மையையும், பதற்றத்தையும் அவர்களுக்குத் தந்துள்ளேன் ". " ஆமாம், ஆமாம் " என்ற நாரதர், " சரி கடவுளே, நீ படைத்த நாடுகளுள் மிக நல்ல நாடு எது ? " கடவுள் பதில் சொன்னார் . " இந்தியாதான் . எல்லா வகை கலாச்சாரங்களும் அங்கே உண்டு . நல்ல இயற்கை வளங்கள், தொழில் வளம், சிறந்த மக்கள் என்று இந்தியாவுக்கு நான் அளித்துள்ளேன் ". " நல்லதும் கெட்டதும் இருப்பதுதான் உங்கள் ஃபார்முலா என்றீர்களே ? இந்தியாவில் பிரச்னைகளே இல்லாமல் ஏன் செய்தீர்கள் ? " கடவுள் கலகலவென சிரித்தார் . " அதற்காகத்தான் இந்தியாவுக்கு அண்டை நாடுகளைக் கொடுத்தேன் ". --- அரசு பதில்கள் .. குமுதம் , 20 . 10 . 2010 .

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

சிந்தனைக்குரிய பகிர்வு.

முனைவர் இரா.குணசீலன் said...

சிந்தனைக்குரிய பகிர்வு.