Thursday, August 4, 2011

பட்டிமன்ற தமாஷ் ! காமெடிப் பட்டாசு !

* " சாதா ரைஸுக்கும், ஃப்ரைடு ரைஸுக்கும் என்ன வித்தியாசம் ? " " சாதா ரைஸ்னா.... புடைச்சுட்டு சமைப்பாங்க . ஃப்ரைடு ரைஸுனா சமைச்சுட்டு புடைப்பாங்க ! " * " பல் டாக்டருக்கும், மத்த டாக்டருக்கும் என்ன ஒற்றுமை ? " " ரெண்டு பேருமே சொத்த பிடுங்குறவங்கதான் ! " * " இன்னிக்கு பேப்பர்ல என்ன முக்கியமான சேதி ? " " நாடாளுமன்றத்தை ஒத்தி வெச்சுட்டாங்களாம் ." " எவ்வளவு தொகைக்கு ? ! " * " அந்த சாதி சங்கத்துக்காரங்க, எதுக்காக ஊர்வலமா போறாங்க ? " " சாதிவாரி கணக்கெடுக்கற பணியில, அவங்க சாதிக்காரங்களத்தான் அதிக அளவுல நியமிக்கணும்னு மனு கொடுக்கத்தான் ! " * " நீங்க பதில் சொல்ல முடியாத அளவுக்கு உங்க பையன் அப்படி என்ன கேட்டுட்டான் ? " " போலி மருந்து தர்ற ஒரிஜினல் டாக்டர் நல்லவரா... இல்ல, ஒரிஜினல் மருந்து தர்ற போலி டாக்டர் நல்லவரானு கேக்கிறான் ." * " ஏ. டி. எம் --ல பணம் எடுக்கப் போறதுக்கு எதுக்கு இவ்வளவு மேக்கப் ? " " அங்க கேமராவெல்லாம் வெச்சிருக்கிறதா கேள்விப்பட்டேன் ! " * " காமன்வெல்த் போட்டியில யாருக்கு முதலிடமாம் ? " " ஊழலுக்குத்தான் ! " * " என்ன பாட்டி... கரன்ட் கம்பியில ஈரச்சேலையை காய வைக்கிறீங்க ? " " அடப் போப்பா ! கரன்ட் வர்றதுக்குள்ள சேல காய்ஞ்சுடும் " --- மதுக்கூர் ராமலிங்கம் . * " ஏழு கழுதை வயசாகியும், பொறுப்பில்லாம இருக்கியே...? நான் போனதுக்கப்புறம்... நீ என்ன ஆவ... எங்க இருப்பேனு கொஞ்சமாவது யோசிச்சியா ? " " என்னப்பா, கிறுக்குத்தனமா பேசிக்கிடிருக்கீங்க . நான் இங்கதான் இருப்பேன் . நீங்கதான் எங்க இருப்பீங்கனு தெரியாது ? ! " * " தொண்டையே சரியில்ல, சாயங்காலம் கச்சேரி வேற இருக்கு, எப்படியாச்சும் என் குரலை காப்பாத்தி கொடுங்கனு சொன்னா...ஒறேயடியா யோசிக்கிறீஈங்களே டாக்டர் ...? " " இல்ல... உங்க ஒருத்தரை காப்பாதறதா... இல்ல, கச்சேரிக்கு வரப்போற நூறு பேரை காப்பாத்றதானு யோசிக்கிறேன் ! " * மேனேஜர் : " ஏண்டா ஆபீஸுக்கு லேட் ? " ஊழியர் : " பஸ்ல துங்கிட்டேன் சார் ! " மேனேஜர் : " ஆபீஸுன்னு ஒண்ணு இருக்கறத மறந்துட்டியா ? " * " ஏம்ப்பா... டாக்டரைப் பார்த்து இந்த பயம் பயப்படுறே ? " " எனக்கு ஆபரேஷன் நல்லபடியா நடக்குமான்னு கேட்டேன் , ' செத்த ' நேரத்துல சொல்லிடறேங்கிறாரே ? ! " * " என்னோட கச்சேரிக்கு வரச் சொல்லி டிக்கெட்டெல்லாம் அனுப்பியிருந்தேனே... நீங்க வரவே இல்லையே ! " " இல்லப்பா... ' அவ்வளவு தூரம் எதுக்காக போகணும் . வீட்டுலேயே தூங்குங்க' னு என் வீட்டுக்காரி சொல்லிட்டா ! " --- ' பட்டிமன்ற ' சிவகுமார் . * " டாக்டர்... என் வீடுக்காரர், விடாம டி. வி. பார்த்துக்கிட்டே இருக்கார் . ஏதாச்சும் பிராப்ளம் இருக்குமா ? " " இது, வியாதியெல்லாம் இல்லையே..." " கரண்ட் போனாலும் மெழுகுவர்த்திய கையில வெச்சுகிட்டு டி. வி.--யைப் பார்த்துக்கிட்டு இருக்கார் ! " * " காலையில ஆபீஸ் போறப்ப, நம்ம வீட்டு சுவத்துல ஒரு கீரலைப் பார்த்தேன் . சாயங்காலம் திரும்பி வந்தா ... காணோமே ! " " ஒரு வீட்டுல ரெண்டு ' க்ராக் ' இருக்கப்படாதுனு உடனடியா சிமெண்ட் பூசி பெயிண்டும் அடிச்சுட்டேன் " * " என்னடி தலைவிரிகோலமா ஆபீஸுக்கு புறப்பட்டுட்டே ? " " லேட்டா போனா... பின்னிருவாங்கள்ல ....அதான் ! " --- பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் . --- அவள் விகடன் . 13 -ம் ஆண்டு மெகா சிறப்பிதழ் , 22 . 10. 10 . இதழ் உதவி : N கிரி , ( நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

No comments: