Sunday, August 28, 2011

பெண்ணுக்கு அதிக திறமை !

குரங்கில் இருந்து மனிதர்கள் தோன்றிய ஆரம்ப காலத்தில், பெண்கள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள் . பெண்கள் வேட்டைக்குப் போனார்களா ? அது ஆண்களின் வேலை அல்லவா என்று ஆச்சரியம் எல்லாம் படக் கூடாது . எல்லா விலங்குகளிலும் ஆணைவிடப் பெண்தான் அதிக வேட்டுவத் தன்மைகொண்டு இருக்கும் . கொசுவை எடுத்துக்கொள்ளுங்கள், ஆண் அனோஃபிலீஸ் . அப்பிராணி, கடிக்காது . ஆனால், பெண் துரத்தித் துரத்திக் கடித்து மலேரியாவைப் பரப்பும் . காரணம், பெண்ணுக்குத்தான் தன் குட்டிகளைக் கட்டிக் காக்க வேண்டிய கடமை இருக்கிறது . இதனாலேயே இயற்கை பெண்களுக்கு அதிக மோப்பத் திறன், அதிக பார்வைக் கூர்மை, அதிக சுவை உணர்வு, அதிக கூரான செவித் திறன், அவ்வளவு ஏன் ... துரித கதியில் ஸ்பரிசத்தை உணரும் தன்மை ஆகியவற்றைத் தகவமைத்து இருக்கிறது . இந்தப் புலன் நுணுக்கத்தினாலேயே ஆணைவிட, பெண் அதிக திறமையுடன் வேட்டையாட முடிகிறது . --- ' உயிர்மொழி ' தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் 20 . 10 . 10 .

No comments: