Wednesday, August 17, 2011

மிடுக்கான பேச்சு !

பேச்சு ஒரு பெர்ஸனாலிட்டி .... மற்றவர்களைக் கவர மேடையில் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் எப்படி பேசி நீங்கள் அசத்தலாம் , உங்கள் பெர்ஸனாலிட்டியை டெவலப் செய்துகொள்ளலாம் ? * ' நெவர், நெவர், நெவர் கிவ் அப் ' -- ஒரு முக்கிய நிகழ்ச்சியில் சர்ச்சிலின் பேச்சை ரேடியோவில் கேட்க உலகமே காத்திருந்த நேரத்தில், அவர் பேசியது இந்த ஐந்தே வார்த்தைகள்தான் . மணிக்கணக்கில் பேசினால்கூட இப்படி ஒரு அழுத்தமான தாக்கத்தை எவராலும் ஏற்பத்த முடியாது ! அதனால் சுருக்கமாக சுருக்கென்று பேசுங்கள் . * விவேகானந்தரின் சொற்பொழிவுகள் காலம் கடந்தும் பேசப்படுவதற்குக் காரணம், அவரது பேச்சில் ஒரு வாக்கியத்தைக் கூட தேவையற்றதாகக் கருத முடியாது . * ஒன்றை விளக்குவதாக இருந்தால்கூட விரிவாகப் பேசாமல் தெளிவாகப் பேசவேண்டும் . " govt for the people, by the people, of the people " என்று ஒரு கூட்டத்தில் பேசிய லிங்கன் ஜனநாயகத்துக்கு மிகச் சாதாரணமாக விளக்கம் கொடுத்தார் . இதைவிட வேறு எளிமையான விளக்கத்தை அரசியல், அறிவியல் பேரறிஞர்களால்கூட கொடுக்க முடியாது . * ' சொல்லைத் தேடு, சொல்லை அறி, சொல்லை சொல்லால் பின்பற்று ' என்கிறார் கபீர்தாசர் . இது வளரும் பேச்சாளர்கள் மறக்கக் கூடாத சூத்திரம் . * பெருங்கூட்டத்துக்காக பேசாதீர்கள் . உலகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருந்த புரட்சியாளர்களின் பேச்சுக்கள் எல்லாம் சிறு கூட்டங்களில்தான் நிகழ்த்தப்பட்டன . * கேட்பாளர்களின் தன்மை அறிந்து பேசுங்கள் . பாமரர்களிடம் பிளேட்டோ, சாக்ரடீஸ் என மேற்கோள் காட்டி பயமுறுத்தாதீர்கள் . * பேசும்பொழுது தன் மனதில்பட்ட உண்மையைப் பேசுங்கள் . அது உங்களுக்கு ஒரு கம்பிரத்தைக் கொடுக்கும் . உண்மையைப் பேசும்பொழுது உங்களையறியாமல் நிங்கள் உயர்வீர்கள் . --- தமிழருவி மணியன் . குமுதம் , 20 . 10 . 2010 .

No comments: