Tuesday, August 9, 2011

அறிவோம் தெளிவோம் .

* உலகத்தின் முதல் சோதனைக்குழாய் குழந்தை பிறந்தது, இங்கிலாந்தில் . * 'கீரைத்தோட்டம் என் மருந்துத் தோட்டம் ' என்று சொன்னவர், லியோ டால்ஸ்டாய் . * இந்தியாவின் முதல் வங்கி , தி ஒய்ரசிடென்சி பேங்க் . * மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள், இருபது லட்சம் . * வீரமாமுனிவரின் இயற்பெயர், ஜோசப் பெஸ்கி . * பலகையே இல்லாத மரம், வாழைமரம் . * செவ்விந்தியர், அமெரிக்க நாட்டில் வாழும் மக்கள் . * உலகில் மிகவும் புழக்கத்தில் உள்ளதாகக் கருதப்படும் பாலம், கொல்கத்தா ஹௌரா . * இரத்த ஓட்ட முறையைக் கண்டுபிடித்தவர், வில்லியம் ஹார்வி . * நோய்களை குணமாக்கும் நிறம், நீலம் . --- ஆரம் . ஜூலை 2010 . நூல் உதவி & பத்திரிகை ஆசிரியர் : செல்லூர் மணியன் , காரைக்கால் .

3 comments:

இரா. முத்துப்பாண்டியன் said...

படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.


சோதனைக்குழாய் குழந்தை


உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது.


அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.



தொலைக்காட்சி பார்த்தவர்


முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே ! பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே ? என்று வினவினார்.


அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு ! (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார்.


திருமால் ! சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் ! திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு!.


அணுவுருவில் நதிகள்


அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம். உதவி தினமலர்.

க. சந்தானம் said...

இரா. முத்துபாண்டியன் , அவர்களே ! நன்றாக விளக்கி கூறியிருக்கிறீர்கள் . நன்றி !

க. சந்தானம் said...

இரா. முத்துபாண்டியன் , அவர்களே ! நன்றாக விளக்கி கூறியிருக்கிறீர்கள் . நன்றி !