Friday, February 14, 2014

சுட்டது நெட்டளவு.

   ஒரு சாவியைப்பார்த்து சுத்தியல் கேட்டது, " உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன்.  ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன்.  ஆனால், நீ சீக்கிரம் திறந்துவிடுகிறாயே அதெப்படி?"
     அதற்கு சாவி, " நீ என்னை விட பலசாலிதான்.  அதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.  பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்.  ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன் " என்றது.
-- ரிலாக்ஸ்.
-- . ' தி இந்து' நாளிதழ்.  வியாழன், நவம்பர் 14, 2013.  

No comments: