Thursday, February 20, 2014

உயர் ரக காபி வேண்டுமா?

  காபிக் கொட்டைகளில் மிகச் சிறந்தது எது என்று தெரிந்தால், காபி சாப்பிடுவதையே நாம் விட்டுவிடுவோம்.  ஆம்.  பிராணிகள், பறவைகள் காபிப் பழத்தை உண்டு, மலம் கழிக்கும்போது வெளியேறும் கொட்டைகளையே ருசியில் சிறந்தவை என்று தரம்பிரிக்கிறார்கள்.  குரங்குகள், எலிகள் உண்பதை
'குரங்கு வஸ்து,'  ' எலி வஸ்து 'என்று வகை பிரிப்பார்கள்.  இதிலேயே மிக உயர்வானது ' புனுகுப்பூனை வஸ்து ' தான்.
     புனுகுப்பூனைகளை காபித் தோட்டத்தில் குடியானவர்கள் வளர்க்கிறார்கள்.  அவை வேண்டாம் என்றால்கூட, காபிப் பழத்தையே தொடர்ந்து தின்னக் கொடுக்கிறார்கள்.  சுகாதாரமற்ற கூண்டுகளில், நகரக்கூட இடமின்றி அடைத்துவைக்கப்படும் புனுகுப்பூனைகளும் - காபிப் பழத்தைத் தவிர, வேறெதுவும் சாப்பிடக் கிடைக்காது என்ற நிலையில் - அதைத் தின்கின்றன.  பிறகு, குடியானவர் அவை கழிக்கும் ' புனுகுப்பூனை வஸ்து ' வைப் பத்திரப்படுத்தி, தினமும் விற்பனைக்குத் தந்து பணம் சம்பாதிக்கிறார்கள்.  இந்த காபிதான் இப்போது உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம். இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ' பெடா ' என அழைக்கப்படும் பிராணிகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
-- சி.ஹரி.  கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ்.  வெள்ளி, நவம்பர் 15, 2013.   

No comments: