Tuesday, February 18, 2014

தொட்டால் சிணுங்கி.

  தொட்டால் சிணுங்கியில் உள்ளவை கூட்டு இலைகள்.  இவற்றின் காம்புக்கு அடியில் உள்ள முண்டு போன்ற பகுதி, சற்றுப் பருத்து இருக்கும்.  இது மெல்லிய சவ்வு செல்களால் ஆனது.  நீர் எளிதில் சென்று வரமுடியும்.  இதில் நீர் நிறைந்திருக்கும்போது இலைகள் விரிந்து இருக்கும்.
     காற்று, பூச்சி, மனிதன் போன்றவற்றில் ஏதோ ஒன்று தன்மீது சற்று வேகமாகப்பட்டால், இலைகளின் கீழ் உள்ள பருத்த பகுதியில் உள்ள செல்கள் நீரை இழக்கின்றன.  அதாவது, தண்ணீர் செடியின் தண்டுக்குள் இறங்கிவிடுகிறது. உறுதியிழந்த் நிலையில், காம்பினால் இலைகளைத் தூக்கிப் பிடிக்க முடியாது.  எனவே, இலைக்காம்பு இறங்குகிறது, சுருங்குகிறது.  சில நிமிடங்களுக்குப் பிறகு நீர் பழைய நிலையை அடைய இலைகள் விரிந்ததாகத் தோற்றமளிக்கின்றன.
-- ஜி.எஸ்.எஸ்.  குட்டீஸ் சந்தேக மேடை.
--  தினமலர். சிறுவர்மலர். நவம்பர் 15, 2013. 

No comments: